❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீ கவிதைகளா
கனவுகளா கயல்விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா
பதில் மொழியா
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️[படம் ;மரகத நாணயம் ]தேவாக்கு இன்று நடந்தது எல்லாம் கனவாக இருந்தால் என்ன என்று கூட தோன்றியது .அவள் காலையில் நிகழ்ச்சியை நினைத்து வேதனைபட்டு கொண்டிருந்தாள் .
காலையில் வழக்கம் போல வேலை எல்லாம் செய்துவிட்டு ஒரு பத்து மணி போல வந்து அமர்ந்தாள்
தேவா.அவள் அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்தாள் வழக்கம் போல அவளுக்கு கிடைத்தது பழைய சாதம்தான் .அதை பற்றி எல்லாம் கவலை படாமல் சாப்பிட ஆரம்பித்தாள் .காலை சாப்பாடு மாட்டுக்கு போகாமல் அவளுக்கு கிடைத்தாலே அது பெரிய விஷயம் என்பதால் தேவா அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .அப்போது அவள் எதிரில் வந்து சேர் போட்டு உட்கார்ந்து கொண்டாள் புவனா .ம்ம்ம் இனி எல்லாம் பழஞ்சி[பழைய சாதம் ] குடிக்க முடியுமோ முடியாதோ நீ இப்போவே நல்லா குடிச்சிக்கோ என்று சம்மந்தமே இல்லாமல் ஆரம்பித்தார் புவனா. தேவா சாப்பிட்டு கொண்டு இருந்தவள் அப்படியே புவனாவை பார்த்தாள் .
என்னட்டி என்ன அப்படி பாக்குற .உண்மையைதான் சொல்றேன். நான் கூட உனக்கு அதிர்ஷ்டம் இல்லன்னு நினைச்சிட்டு இருந்தேன் .ஆனா அது எல்லாம் பொய்ன்னு ஆகிடுகிச்சு .ம்ம்ம் தங்கசிலை மாதிரி இருந்து குயில் மாதிரி குரல் இருக்க பெண்ணுக்கே இந்த காலத்துல நல்ல பையன் கிடைக்காது.ஆனா உனக்கு அதிர்ஸ்டம் அப்படி இருக்கு அதனாலதான் கார் சொந்தமா ரெண்டு வீடு வச்சிருக்கவன் தேடி வந்து உன்ன கட்டிக்கிறேன்னு சொல்றான்.அங்க உனக்கு ஒரு வேலையும் இருக்காது .நீ ராணி மாதிரி இருக்கலாம் .ஒரு பைசா கூட நம்ம அவங்களுக்கு தர வேண்டாம் .உனக்கு 50 பவுன் அவங்க போட்டு 5 லட்சம் பைசாவும் தருவங்களாம் .ம்ம்ம் இவ்ளோ வசதியான குடும்பத்துல இருந்து உன்ன கேட்டு வந்துருக்காங்கன்னா நீ அதை நினைச்சு சந்தோசம் படணும் .என்ன இப்போ மாப்பிள்ளைக்கு ஒரு 45 வயசு இருந்து உன்ன இரண்டாம் தாரமா கேட்டா என்ன .அதானால என்ன ஆகிட போகுது அவங்களை மாதிரி ஒரு பணக்கார குடும்பத்துல இருந்து உண்ண பொண்ணு கேட்டதே பெருசு .உனக்கு மனசுலாவுதாட்டி [புரியுதா டி ]
CZYTASZ
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]
Romansவார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤