வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -3

1.3K 43 24
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

சூர்யா அமைதியாக கிட்சனில் நின்று கொண்டிருந்தான். அவன் பாட்டுக்கு பாலை அடுப்பில் வைத்துவிட்டு எங்கோ பார்த்து கொண்டு இருந்தான். அவனுக்கே தெரியாமல் அவன் மனம் அவளை நினைத்தது.(me:நினைக்க வச்சது நான்தான்🤣)

சில மாதங்களுக்கு முன்பு சூர்யா அவன் உடன் வேலை செய்யும் நண்பன் ஒருவன் திருமணத்துக்காக சென்றிருந்தான். பிரசாத் மனைவிக்கு அப்போதுதான் இரண்டாவது குழந்தை பிறந்திருந்ததால் அவனால் வர முடியாத சூழ்நிலை எனவே சூர்யா மட்டும் கன்னியாகுமரி வந்திருந்தான் .சூர்யாக்கும் கன்னியாகுமாரியில் நாகர்கோவில் பக்கம்தான் சொந்த ஊர் என்றாலும் அவன் அவ்வளவாக ஊர்பக்கம் வர மாட்டான். சூர்யா சிறு வயதில் இருந்தே எதை பார்த்தும் அதிகம் பயப்பட மாட்டான் ஆனால் அவன் பயப்படும் ஒரு விஷயம் இருக்கிறது அது அவன் கோபம்தான்.அவன் எல்லாவற்றிற்கும் கோபம் கொள்பவன் அல்ல ஆனால் தன்னுடைய தவறு இல்லாத தன்னுடைய அமம்மாவின் செயலுக்கு தன்னை யார் கேள்வி கேட்டாலும் அவனுக்கு பிடிக்காது அதனால் அவன் அந்த மாதிரி இடத்தில் நிற்க கூட விரும்ப மாட்டான் .மொத்தத்தில் துஷ்டனை கண்டால் தூர விலகு என்னும் எண்ணத்தில் அவன் வாழ்ந்து கொண்டு இருந்தான் .இப்போது கல்யாணத்துக்கு வந்தது கூட வேறு வழி இல்லை என்பதால் தான்

இந்த கல்யாணத்துக்கு கூட வந்திருந்தான்.அவன் என்னதான் பிரச்சனை விட்டு தள்ளி இருக்க நினைத்தாலும் அவனை தேடி பிரச்சனை வந்தது அவனுடைய அம்மா உருவத்தில் .அவன் ஊர் பக்கம் வராமல் இருக்க காரணமே அவ்னுஇடைய அம்மா பற்றி தன்னிடம் யாராவது பேசுவார்கள் என்றுதான் ஆனால் இப்போது அவன் அம்மா இந்த கல்யாண வீட்டுக்கே வந்திருந்தார் அவரை பார்க்கவே அவ்வளவு மகிழ்சியாக தெரிந்தார்.அதை பார்த்த சூர்யாக்குதான் அவ்வளவு வேதனையாக இருந்தது .அவனுக்கு எப்படி தங்களை விட்டு சென்று விட்டு தங்கள் அம்மாவால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் அவன் அவரிடம் சென்று பேசவோ இல்லை அவரை அங்கேயே நின்று தொடர்ந்து பார்க்கவோ விருப்பம் கொள்ளாவில்லை .அவன் அருகில் இருந்த நண்பனிடம் சொல்லிவிட்டு நண்பன் பைக் எடுத்துவிட்டு சென்று விட்டான்.அவனுக்கு அவ்வளவு கோபமாக வந்ததது அவன் மனம் போன போக்கில் சென்று கொண்டு இருந்தான் அவன் அம்மாவால் அவன் பட்ட அவமானங்கள் எல்லாம் அவன் கண் முன்னே வந்து போக கோபம் அதிகம் ஆனது கோபம் அதிகம் ஆக ஆக அவன் பைக்கில் செல்லும் வேகம் அதிகம் ஆனது ஒருகட்டத்தில் இவ்வளவு கோபத்தில் வேகமாக வண்டி ஓட்ட வேண்டாம் என்று முடிவு செய்தான் .அவனுக்கு தனக்கு ஏதேனும் ஆபத்து வந்தாலும் பிரச்சனை இல்லை தான் வேகமாக சென்று யாரையாவது இடித்து அவர்களுக்கு ஆதி பட்டால் என்ன செய்வது என்று பைக்கை ஒரு இடத்தில் நிறுத்தியவன் அப்படியே குளத்துக்கு அருகில் இருந்த கல்லில் அமர்ந்து விட்டான்.அங்கே வீடுகள் எல்லாம் இல்லை .ஆனால் அருகில் ஒரு கோவில் இருந்தது .அதனால் மக்கள் நடமாட்டம் உள்ள இடம்தான் .அவன் அந்த கல்லில் தலையை குனிந்து அமர்ந்து இருக்க கொஞ்சம் நேரம் கழித்து அவன் தன்னை யாரோ பார்ப்பது போல் உணர்ந்தான் .எனவே சட்டென்று தலையை நிமிர்ந்து பார்த்தான் .அவன் சாதாரணமாக பார்த்தாலே கொஞ்சம் முறைப்பது போல இருக்கும் .இப்போது கோபத்தில் வேறு இருந்ததால் கொலை வெறியில் பார்ப்பது போல இருந்தது .அவனை அப்படி பார்த்த தேவாக்கு பயம்தான் வந்தது .யாரை பார்த்தாலும் பயப்படும் தேவா இப்படி அவன் முறைப்பதை பார்த்து இன்னும் பயந்தாள்.அவள் பயம் அவள் கண்ணில் தெரிந்தது .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Onde histórias criam vida. Descubra agora