வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -22

1.2K 51 21
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆத்தோர பேரழகி
எங்க நீ வந்தழகி உன்ன
பாக்குறேன் உள்ள உணருறேன்
நான் காதல

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

இரவு 10 மணி அளவில் உறங்க சென்றார்கள் தேவா மற்றும் சூர்யா இருவரும் .ஆனால் இருவருக்கும் உறக்கம் கொஞ்சம் கூட வரவில்லை .லைட் ஆன் செய்த சூர்யா  தேவாவை பார்த்தான் .அவளும் உறங்காமல் இருந்தாள்.

என்ன ஆச்சு தேவா உனக்கு தூக்கம் வரலையா என்று கேட்டான் சூர்யா .தேவா இல்லை என்பது போல தலை அசைத்தாள் .

என்ன நீ தூக்கம் வரலன்னு சொல்லலிட்டு இருக்க .மயக்கம் போட்டு வேற விழுந்துருக்க ரொம்ப டையார்டா இருப்ப அதனால ரெஸ்ட் எடுக்க வேண்டாமா. கொஞ்சம் ட்ரை பண்ணி தூங்கு என்றான் சூர்யா .பாவம் தேவாக்கு சுத்தமாக உறக்கமே வரவில்லை அவள் அவனை பார்த்து சரி என்பது போல தலை அசைத்தாள்.அவளுக்கு தூக்கம் வரவில்லை என்று சூர்யாக்கு புரிந்தது .

தூக்கம் வரலன்னா தூங்க வேண்டாம் .என்றான் சூர்யா அவன் அப்படி சொன்னதை கேட்டு தேவா முகம் பிரகாசம் ஆனது .

உனக்கும் தூக்கம் வரல எனக்கு தூக்கம் வரல என்ன பண்ணலாம் .ம்ம்ம் சரி எதாவது பேசலாம் என்று சொன்னான் சூர்யா.அவன் அப்படி சொன்னதும் சூர்யாவை என்ன என்பது போல பார்த்தாள் தேவா .

என்ன எதுக்கு அப்படி பாக்குற உனக்குத்தான் தூக்கம் வரலல்ல .அதனால ஏதாவது பேசலாம் என்று சொன்னனான் சூர்யா .

தேவா சரி என்பது போல தலை அசைத்தாள். முதல்முறை இருவரும் ஒன்றாக அமர்ந்து சாதாரணமாக பேச ஆரம்பித்தார்கள்.

இங்கே அமிர்தா உறங்கி கொண்டிருந்த குழந்தை அகரனை பார்த்து கொண்டிருந்தாள்.

என்ன ஆச்சு அம்மு ஏன் இன்னும் ஒரு மாதிரி இருக்க அவன் நல்லாதான இருக்கான்.அவனுக்கு ஒண்ணுமில்ல. நீ தேவை இல்லாம பயப்படாத .தூங்கு அம்மு என்றான் பிரசாத் .

அமிர்தா அவனை பார்த்தாள் .பிரசாத் குழந்தையை வாங்கி தொட்டிலில் போட்டான் .அமிர்தா எதுவும் பேசவில்லை .குழந்தைக்கு அப்படி ஆனதற்கு பிறகு அவள் இப்படித்தான் இருக்கிறாள் .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Où les histoires vivent. Découvrez maintenant