வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -41

648 29 30
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️

உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி காதல் ஒரு கனவு மாளிகை
எதுவும் இங்கு மாயம்தான்
எல்லாம் வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️

🦋இதுவரை என்ன பண்ணி வச்சிருக்கோம்ன்னா நம்ம பூஜா லவ் கொஞ்சம் சேர்ந்துருக்கு.புவனா சென்னை வந்தாச்சு and ரகு அனுவை கூட்டிட்டு போக வந்துருக்குறதா சொல்லறாரு. இதுதான் நடந்துருக்கு 🦋

வாசலில் புவனா நிற்பதை பார்த்ததும் தேவா அதிர்ச்சியானாள். அவளுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை.

"என்ன மக்கா என்ன பாத்துட்டு அப்டியே நிக்கியா.. உள்ள வான்னு கூப்பிடு ",என்று சொன்னாள். அப்போது வாசலில் ஏதோ ஒரு சத்தம்கேட்டு ரூமைவிட்டு வெளியே வந்த சூர்யா வாசலில் புவனாவை பார்த்து அதிர்ச்சி ஆனான்.அவனை பார்த்ததும் புவனா போலியான புன்னகையுடன்

"மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை ", என்று கேட்டார்.

"இதுவரைக்கும் நல்லாதான் இருந்தேன்",. என்றான் சூர்யா முகத்தில் அடித்தது போல. அப்போதுதான் ரூமிலிருந்து வந்த செல்வம் மற்றும் கிருஷ்ணா இருவரும் வாசலில் நிற்கும் புவனாவை பார்த்து குழம்பி போனார்கள். செல்வம் சூர்யாவை பார்க்க சூர்யா பெருமூச்சு விட்டவன்

"இவங்கதான் தேவாவோட சித்தி", என்றான். உடனே செல்வம்.

"என்னப்பா நீ சித்தின்னு சொல்லிட்டு வாசல்ல நிக்க வச்சி பேசிட்டு இருக்க உள்ள வாங்க ",என்று அழைத்தார். சூர்யா எதுவும் பேசவில்லை அமைதியாக உள்ளே சென்று விட்டான் அவன் முகத்திலேயே தெரிந்தது அவன் எந்த அளவுக்கு கோபத்தில் இருக்கிறான் என்று. புவனா இதை எல்லாம் நினைத்து கவலை கொள்வாளா  என்ன அவர் பாட்டுக்கு வீட்டுக்குள் வந்தார்.

கிருஷ்ணாக்கு புவனாவை பார்த்ததும் ஏதோ படத்தில் வரும் வில்லியை பார்ப்பது போல இருந்தது. அவன் எதுவும் பேசாமல் இருக்க வீட்டுக்குள் வந்த புவனா வீட்டை சுற்றி பார்த்தாள். பெரிய மாளிகை என்று சொல்ல முடியாவிட்டாலும் வீடு அழகாகதான் இருந்தது.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Место, где живут истории. Откройте их для себя