வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -33

1.1K 39 20
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கரு கரு கண்களால்
கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம் குழி விழும்
கன்னத்தில் குடி இரு
என்கிறாள் விலையில்லா
ஆயுள் வரம் ஓஹோ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

காலை நேரம் அழகாக விடிந்தது. சூர்யாக்கும் தேவாக்கும் அந்த நாள் இன்னும் அழகாக இருந்தது. அவர்களுக்குள் இருந்த சிறிய இடைவெளியும் முடிந்து ஈருடல் ஓர் உயிராக வாழ ஆரம்பித்து இருந்தார்கள்.இருவரின் வாழ்வின் தொடக்கத்தை இருவரும் மிகவும் ரசித்தார்கள்.

தேவா கண்ணை திறந்து பார்த்தாள் அப்போது சூர்யா அவளைதான் பார்த்து கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் அவளுக்கு ஏனோ புதிதாக வெட்கம் வந்தது.அவனை பார்த்து சிரித்தவள் கண்ணை மூடி கொண்டாள்.அதை சூர்யா ரசிக்கவே செய்தான்.ஏனோ அவனுக்கும் சிரிப்பு வந்தது.

என்ன ஆச்சு என்று கேட்டான் சூர்யா அவன் அப்படி கேட்டதும் புன்னகை செய்தவள் கண்ணை திறந்து பார்த்தவள் ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தாள் அவளால் புன்னகை செய்வதை நிறுத்தவே முடியவில்லை. அவளை ரசிக்கும் தன்னுடைய கண்களையும் சூர்யாவால் தடுக்க முடியவில்லை.

இப்போது தேவா அவனை பார்த்து கண்ணால் என்ன என்று கேட்டாள்.

ஐ லவ் யூ என்று யோசிக்காமல் சொன்னான் சூர்யா அவன் சொன்னதும் தேவா முகத்தில் புன்னகை தோன்றியது.

நான் இப்போ எந்த அளவுக்கு சந்தோசமா இருக்கேன்னு உனக்கு எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல தேவா. நம்ம வாழ்க்கை வேற வேற பக்கத்துல இருந்துச்சு ஆனா அது தானா சேர்ந்துச்சு யாராவது லவ் பன்றேன்னு என்கிட்ட சொன்னா எனக்கு ரொம்ப வித்யாசமா இருக்கும் ஆனால் இப்போ அது ரொம்ப அழகா தெரியுது. வித்யாசமா தெரியுறத எல்லாம் அழகா மாத்தி ரசிக்க வைக்கிறதுதான் காதல் போல. நீ என்னோட வாழ்க்கைல வந்ததுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் எனக்குள்ள இருந்த கஷ்டம் எல்லாமே இப்போ சரியா போச்சு. இனி நான் எதுக்கும் தேவை இல்லாம ரொம்ப கவலை பட மாட்டேன். இனி நம்ம வாழ்க்கையில எப்போவும் சந்தோசம் மட்டும்தான் இந்த சந்தோசம் நம்ம வாழ்க்கையில வர முக்கிய காரணம் நீதான் அதனால நான் உனக்கு நன்றி சொல்லணும்ன்னு நினைக்கிறேன் என்று சூர்யா சொல்ல இவ்வளவு நேரம் புன்னகை செய்து கொண்டிருந்த தேவா முகத்தில் இருந்த புன்னகை இப்போது காணாமல் போனது. இனி எந்த பிரச்சனையும் இல்லை அவள் நினைத்து கொண்டிருக்கும் போது அவன் இப்படி நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று சொன்ன உடன் தேவாக்கு இன்னும் அந்த இடைவெளி தங்களுக்குள் இருக்கிறதோ என்று தோன்றியது.

தேவா வார்த்தையால நன்றி சொன்னா நல்லா இருக்காது அதனால என்று சூர்யா நிறுத்த அவனை என்ன என்பது போல பார்த்தாள் தேவா.

இங்க பாரு நான் இப்போ உனக்கு நன்றி சொல்ற முறை கடன் மாதிரி இதை எப்போவும் நீ மட்டும் வச்சிக்க கூடாது என்கிட்ட எப்படியும் திரும்ப குடுத்துறணும் என்று சொன்னான் சூர்யா தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.

குட் நல்ல பிள்ளை என்று சொன்ன சூர்யா

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Onde histórias criam vida. Descubra agora