"அப்ப அவன் பண்ணது மட்டும் சரியா?? அவன் பண்ண காரியத்துக்கு இந்நேரம் அவனைக் கொன்னுருக்கணும்--"
"ரேணு.. உங்களுக்கு இனி இங்க வேலை இல்ல. நீங்க போலாம்."
"வாட்?? எப்டி உங்களால இப்டி மனசாட்சியே இல்லாமப் பேச முடியுது?? இந்த சேனலுக்காக எவ்ளோ செஞ்சிருக்கேன் தெரியுமா?? இதை விட்டுட்டு நான் எங்க போவேன்??"
"அது என் பையனைக் கொல்ல முயற்சி பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். Now get out and get lost."
திக்பிரமை பிடித்ததுபோல அமர்ந்திருந்தவளை, மீண்டும் கைபேசியில் வந்த மனோவின் குரல்தான் நிகழுலகிற்கு அழைத்து வந்தது.
"ரேணு.. என்னடி, நான் பேசிட்டே இருக்கேன், நீ அமைதியாவே இருக்க? என்னாச்சு ஒனக்கு? எனக்கும்வேற ஃபோன் மேல ஃபோனா வந்துட்டு இருக்கு... நீ கிளம்பி சேனல் ஆபிஸ் வந்துடு, நானும் அரைமணி நேரத்துல வந்துடுவேன். நியூஸை ப்ரொசீட் பண்ணுவோம்... சரியா? எதாவது பேசு ரேணு..!?"
"ம-- மனோ.. எனக்குக் கொஞ்சம்.. டைம் வேணும். நான் அப்பறமா உன்னைக் கூப்பிடறேன். அதுவரை டிஸ்டர்ப் பண்ணாத.. ப்ளீஸ்."
"ஹேய் ரேணு--"
____________________________
சங்கம் டிவி அலுவலகம், நுங்கம்பாக்கம்.
ரேணு தலைமுடியை ஒதுக்கியவாறே வேகமாக உள்ளே வந்தாள். கண்கள் லேசாகச் சிவந்திருந்தன. அதில் மையிட்டு மறைக்க முயன்றிருந்தாள்.முன்னறையில் காத்திருந்த மனோ நிமிர்ந்து அவளை அதிருப்தியாகப் பார்த்தான்.
"ஹ்ம்ம்.. ரெண்டு மணிநேரம்.. பரவால்ல. நான்கூட நாலைஞ்சு நாள் கழிச்சுத்தான் கூப்பிடுவியோன்னு நெனச்சேன்.."
மனோவின் குரலில் ஆற்றாமை கொதித்தது. ரேணு பெருமூச்செரிந்தாள்.
"மனோ.. ஐம் சாரி. எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. இதெல்லாம் நான்--"

YOU ARE READING
உயிர்வரை தேடிச்சென்று
Mystery / Thrillerவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...