4

492 15 20
                                    

4..காதல்

'என்ன பையை எடுக்க இவ்வளவு நேரமா' தேடிவந்த கண்ணில் கிடைத்தது கன்னத்தை தாங்கிபிடித்திருந்த கிருஷ்ணா தான்.

அனுக்கே பாவமாக இருந்தது கிருஷ்ணாவை பார்க்க.

'பாஸ் எவ்வளவு கெத்தா இருப்பாரு. இந்த ராதா வச்சி செய்ததில் இப்படி ஆகிட்டார். இனி நாமும் அவரை கிண்டல் எதும் செய்யக்கூடாது' இவள் வருந்தி என்ன பிரயோஜனம். வருந்த வேண்டியவள் வருந்தினாள் தானே.

"பாஸ் என்னாச்சி?"

"அவன் ஓடிட்டான்"

"பாஸ் என்ன சொல்லுறிங்க"

"என்ன சொல்ல? ஒன்னும் சொல்லுறதுக்கில்லை"

மாதவனன் ராதா பெயருடன் கூடிய புகைப்படத்தை பார்த்து சிட்டாக பறந்துவிட்டான் விமான நிலையத்திலிருந்து.

'மாதவா.. மயிரிலையில் உயிர் தப்பித்து பல கிலோ மீட்டர் தள்ளி ஓடிவிட்டான். ஓடி கலைத்தவன் லிப்ட் கேட்டு ஊருப்பக்கம் ஓடிடனும், வழியில் சிக்கிய காரின் உதவியோடு.

"என அனு இப்படி ஆகிடுச்சி"

"போங்க சார் நாம பட்ட கஷ்டம் எல்லாம் போய்யிடுச்சி. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் சார், இவன் இப்படி தெரித்து ஓடும் அளவுக்கு இவ என்ன செஞ்சி இருப்பா"

அனுவை முறைத்த, "உன் பிரண்ட் பத்தி உனக்கு தெரியாது பாரு, அவனை வச்சி செஞ்சிருப்பா. கிட்டத்தட்ட அடிமையா வச்சி இருப்பா முதலில் காதல் மோகத்தில் இருந்தவனுக்கு போக போக வெறுத்து போய் வடநாட்டுக்கு ஓடிட்டான்"

"சார் இருங்க அவகிட்ட மாட்டி விடுறேன். தெய்வமே அப்படி எதும் செஞ்சி வச்சிடாத, அவகிட்ட என்னால ஓரியாட முடியாது"

"அந்த பயம் இருக்கட்டும்"

"இப்போ அவனில்லாம வீட்டுக்கு எப்படி போவது, அந்த ராட்சசி என் ரத்தத்தை குடிக்க கூட தயங்க மாட்டா"

"இருங்க அவளுக்கு போன் போடுறேன்"

"லவுட் ஸ்பீக்கர்ஸ் போடு"

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now