14 காதலன்!
இப்படியே தொடர்ந்தது இந்த தொலைபேசி பயணம்…சொல்லாமலேயே காதல் வளர்த்தார்கள்.
அவனுக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் கால் பேசி பேசி கிட்டத்தட்ட அவளை அவன் குரலுக்கு அடிமை ஆக்கினான்.
நாளுக்கு நாள் இவர்களின் போனில் பேசும் பேச்சுகள் அதிகரித்துக் கொண்டே தான் போனது, இரவுகளில் வரும் நிலாக்கு போட்டியாக இருவரும் காய்ந்தார்கள்.
ஆரம்பத்தில் சாதாரணமாக தொடர்ந்தாலும் ராதா சிறு தயக்கத்தோடுதான் பேசினாள்.
இருவருமே குடும்பத்தை பற்றி பேசிக்கொள்ளவில்லை.
கல்லூரி முடித்து ராதா வரும் போது ஒரு ஓவியத்தை பார்த்து நின்றாள்.
“ச்சே நம்மை எல்லாம் எந்த பையனும் வரைந்து தரமாட்டான் போலவே” அந்த யோசனையில் வந்தவள்…
ஃபோன் அடிப்பது கூட தெரியாமல்… அந்த ஓவியத்தை நினைத்தவள் தோட்டத்தில் உலாத்திக் கொண்டு இருந்தாள்.
சூரியன் மறைந்ததும்தான் வீட்டுக்குள் வந்தாள், “முப்பதுக்கு மேல் மிஸ்டு கால் இருந்தது” அதை பார்த்ததும் ராதாக்கு இனம் புரியாத மகிழ்ச்சி.
அவளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை, இதை எல்லாம் ஸ்பீட் வட்டி போட்டு அவன் வாங்கிவிடுவான் என்று.
அவசரமாக அவனுக்கு கால் போட்டாள்.
“என்னாச்சி எதுக்கு இவ்வளவு மிஸ்டு கால்” பதட்டமாக ராதா வினவ.
அதே பதட்டம் குறையாமல் கண்ணா திட்டத் துவங்கி விட்டான்.
“கண்ணா போதும்… நிறுத்து” மூச்சிவாங்க நிறுத்தினான்.
“என்னாச்சி கண்ணா உனக்கு எதுக்கு இந்த கோபம்”
“பயந்துட்டேன் எப்போதும் ஒரே ரிங்கில் எடுத்துடுவ இத்தனை கால் செய்தும் எங்கே காணமேன்னு பதறிட்டேன்”
“நான் தோட்டத்தில் இருந்தேன் போன் சார்ஜில் இருந்தது அதனால தான் சரியா”