25

246 12 4
                                    

25

ஆரம்பத்தில் மாதவன் நன்றாக தான் இருவரையும் புரட்டி போட்டான்.

பின் இருந்து மரத்தால் மாதவனை அந்த பாரின் மாப்பிள்ளை அடி விட, அதோடு விடாமல், பக்கத்தில் இருந்த முள் செடியை எடுத்து பலமாக அடித்துவிட்டான்.

மாதவனால் தாக்கு பிடிக்க முடியவில்லை கீழே தள்ளி விட்டதில், ஏற்க்கனவே முதுகில் முள் குத்தி இருந்தது. அது வேறு இன்னும் ஆழம் பதிந்தது, வலியும் எரிச்சலையும் கொடுத்தது, முள்ளை எடுத்தால் கொஞ்சம் பரவாயில்லையாக இருக்கும் என்று நினைத்தான்.

மாதவன் முள்ளை எடுக்க முயற்சி செய்யும் போது, இருவரும் மாதவனை அடிக்கத் துவங்கினார்கள்.

அதற்குள் அங்கு கிருஷ்ணா வந்து அடித்துக் கொண்டு இருப்பவர்களை பிரித்து எடுத்து மாதவன் முதுகில் குத்தி இருந்த முள்ளை எடுத்து விட.

இருவரும் கோபமாக எழுந்து இருவரையும் புரட்டி எடுத்தோம்.

அந்த இரு டுபாக்கூர் மாப்பிள்ளைக்கு தெரிந்து விட்டது, இவர்கள் இருவர் முன்னால் தங்கள் பருப்பு வேகாது என்று.

இருவரும் அடி வாங்கினாலும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

"எங்கடா ராதா சொல்லுறிங்களா இல்லை அடி இன்னும் வெழுக்கட்டுமா?"

"சார் சார் விட்டுடுங்க சொல்லிடுறோம்" ஓனான் மாப்பிள்ளை ஒத்துக்கொள்ள.

பாரின் மாப்பிள்ளை, "அடச்சி வாயை மூடுடா, உன்னை நம்பி கூட்டிட்டு வந்ததுக்கு கழுத்தை அறுத்துட்ட இல்லை"

"நீ என்னடா ஜிம் பாடி தாங்குவ, நான்ல  ஒரு அடி ஓங்கி அடிச்சா செத்துடுவேன், எனக்கு உயிர் முக்கியம்”

கிருஷ்ணா அவனை பக்கம் இருந்த கொடியில் கட்டி விடும் போது.

மாதவன் இன்னொருவனை அடித்து வெழுத்தான் "ராதை எங்கே சொல்லு" கோபத்தில் அவனது நரம்பு எல்லாம் புடைத்து நிற்க.

"சொல்ல முடியாது டா" அவன் அடி வாங்கினாலும் திமிராக சொல்ல.

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now