17காதலன்!
அடுத்த நாள் தலைவலியோடு எழுந்தாள் ராதா, கிருஷ்ணா இரவு முழுவதும் தூங்காமல் அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“டேய் இங்கே என்ன நான் தூங்கரதை சைட் அடிச்சிட்டு இருக்க, என் மேல ஆசை எல்லாம் வளர்த்துக்காத புரியுதா”
‘திமிரை பாறேன்… நானே இவளை வீட்டை விட்டு துரத்த பாடுபட்டால் இவ குடும்ப மானத்தை வாங்கிட்டு இருக்கா இதுல இந்த எகத்தால பேச்சு வேற’
அவ சரக்கு அடிச்சிட்டு புலம்பியதால் ஒன்னும் அவன் முழித்து இருக்க வில்லை.
ராதாவின் இன்ஸ்டா லைவை பார்த்து பிஸ்னஸ் பார்ட்னர் தொடங்கி சொந்தக்காரங்க வரை, ஏன் வீட்டு வேலை செய்யும் அனைவரும் ஏதோ துக்கம் விசாரிப்பது போல.
“என்ன தம்பி இப்படி ஆகிடுச்சி, இனி எப்படி அவளுக்கு கல்யாணம் நடக்கும்”
“அது பிராங்க் சோக்கு நடிச்சது” கிருஷ்ணாக்கு சொல்லி சொல்லி வாய் தான் வலித்தது, ஆனால் அவன் சொல்வதை நம்பத்தான் யாருமில்லை.
தூங்க கண் அசர அசர… போன் மெசேஜ் என்று வந்து ஒரு வழிபடுத்தி விட்டார்கள் அவனது சுற்றமும் நட்பும்.
“நைட்டு முழுக்க, இவ செய்த குளறுபடியில் தூங்காம தவிச்சிடுட்டு இருந்தான், எழுந்ததும் இந்த ரதிதேவியை சைட் அடிச்சி கிழிப்பாங்க”
“ஹா… ஹா சம்பவம் பெருசு போல”
“ஆமா… யாரு சொல்லு நான் அவன் கிட்ட பேசுறேன்”
ராதா முகம் மாறியது.
“கிருஷ்ணா வேண்டாம்டா இட்ஸ் ஓவர்”
“என்னாச்சி சொல்லு நான் பாத்துக்கிறேன் நான் போய் அவன்ட பேசுறேன்”
“இல்லை அவன் என்னை வேண்டா சொல்லி போயிட்டான், எனக்கும் அவன் வேணா”
“சரி பையன் பாக்கட்டா கல்யாணம் செஞ்சிக்கிறியா?” சிறிது நேரம் யோசித்தவள்,
“கிருஷ்ணா எனக்கு ஒன் இயர் டைம் வேணும்”
“சரி.. மாமா மேல பிராமிஸ் செய் தண்ணி இனி அடிக்க மாட்டேன்னு”