28
ராதா மாதவன் அருகில் வரும் வரை கூட பொறுக்க முடியாதவன், அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தான்.
"ராதை வந்துட்டியா, இப்போ தான், எனக்கு போன உயிர் திரும்ப வந்து இருக்கு"
'என்ன இவன் பைத்தியம் போல பேசிட்டு இருக்கான்'
மாதவனை ஒதுங்கி போன ராதா, தாரகை முன்நின்று கையில் ஒரு காகிதத்தை நீட்டினாள்.
"என்ன இது?"
"நீ எனக்கு முதலும் கடைசியுமாக கொடுத்தது" என்று அவளை வரைந்து தந்த பென்சில் ஸ்கெட்சை அவளிடமே கொடுத்தவள்.
"ரொம்ப நன்றி இனி இது என் கிட்ட இருக்கறதில் புரயோஜனம் இல்லை. ஹாப்பி மேரிட் லைப் தாரகை" என அவளை அணைத்துவிட்டு கிளம்பினாள்.
மாதவனின் மனம் பொசுங்கி... கருகியது, அவளது வார்த்தையை கேட்டு.
“தேங்க் யூ தாரகை என்னை யாருன்னு தெரியாமலேயே எனக்கு வரைஞ்சி தந்திருக்காங்க, பிரண்டா வச்சிக்கலாம் என்று நினைத்தேன், ஆனா நான் சாதாரண மனிசியாக கூட உனக்கு தெரியவில்லை என்று புரிந்துகொண்டதன் பிறகு இது எதுக்கு தேங்க் யூ”
"போறேன் மாதவன்" என்று அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்.
"ராதா ஒரு நிமிசம்"
"சொல்லுங்க மாதவன்"
"உனக்காக வாங்கியது" என்று ஒரு சிறு பெட்டியை கொடுத்தான்.
ராதா வாங்காமல் தயங்கி நிற்க.
"பிரண்டா வாங்கிக்கோ ராதா" இந்த வார்த்தை சொன்ன போது கூட தயங்கி நின்றாள்.
"சரி அப்போ நீ கொடுத்ததை நீயே வச்சிக்கோ" கையில் அணிந்திருந்த அந்த பெயர் பொறித்த பிளாட்டினம் ரிங்கை கழட்டி கொடுக்க போனான் மாதவன்.
"இல்லை வாங்கிக்கிறேன்" என ராதா வாங்கிக் கொண்டு.
"மாதவன் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்ன்னு நினைத்தேன், அதுக்கு நேரமே கிடைக்கவே இல்லை இப்போ சொல்லட்டா"
"ம்ம்ம்ம்..." மாதவன் தயக்கத்தோடு அவளது விழிகளை பார்த்தான்.