26

275 12 4
                                    

26

மருத்து போட்டு விட்டதும், சிறிது நேரம் இருவரும் நடந்தார்கள், அருகில் இருக்கும் கிணரை பார்த்த கிருஷ்ணா.

“நிறைய ஆழமா”

“இல்லை கொஞ்சம் கம்மி தான்”

இருவரும் கொஞ்ச நேரம் கிணற்றில் நீந்திக் கொண்டிருக்க கிருஷ்ணாவின் கண்கள் அவனின் இதயத்தின் அருகில் இருந்த ராதை பெயரை கோபமாக பார்ப்பதை மறக்கவில்லை.

மாதவன் மனமோ... 'தப்பு செஞ்சிட்டேன், உணர்ச்சி வசப்பட்டு ராதாகிட்ட அப்படி பேசி இருக்க கூடாது, என்னை கீழ் தரமா நினைத்து இருப்பா' மனதால் மாதவன் வருந்தினான்.

சில மணி நேரம் கழித்து இருவரும் மேல் எழுந்து வர.

அனுவை ராதா ஒரு ஓரமாக உட்கார வைத்து சமாதானப் படுத்தத் துவங்கினாள்.

"வேணா ராதா… என் பக்கத்தில் வராத, உன்னை பார்த்தா பத்திக்கிட்டு வருது எனக்கு" அனு தலையை சிலுப்பிக்கொண்டு போக.

"எல்லாம் முடிஞ்சிடுச்சி, நாளைக்கு தான் முடிய போவுது ஆனா இன்னைக்கே இந்த ஆட்டத்தை முடிச்சி வச்சிக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிழம்ப போறோம், இப்போ ஓகே வா உனக்கு"

'பண்றது எல்லாம் செஞ்சிட்டு வந்துட்டா, கட்டி பிடிக்கறதுக்கு என்ன... செய்யாத சேட்டை இல்லை. பத்தாதுக்கு பாஸ் நல்லதுக்கு அவர் பக்கம் நின்னா, நான் லவ் செய்யறேன்னு வேற சென்ன இல்ல, இனி இவகிட்ட பேசவே கூடாது'

"புரியுது உன்னோட கோபம், நான் சில இடத்தில் கண்ணாவை பார்த்து ஸ்லிப் ஆனது உண்மை தான். நான் கிருஷ்ணாக்கு தூரோகம் செய்த கணக்கில் வராது. ஆனா நீ தான் என்னை காப்பாத்திட்டியே, இனி இது போல நடக்காது  தங்கம் புரிஞ்சிக்கோ. இது எல்லாம் செஞ்சது எனக்காக இல்லை, எல்லாம் கண்ணாக்காக தான்..." ராதா தொடங்கி நடந்தது அனைத்தும் சொல்ல.

"என்னடி சொல்லுற! நான் கூட, உனக்காக தான் இது எல்லாம் செஞ்சிட்டு இருக்கன்னு நினைத்தேன், அவனுக்காகவா?"

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now