8

287 11 15
                                    

8…காதலன்!

‘இவ விட மாட்டா போல’

“எதுக்கு இப்போ என் கூட வர”

“அப்படி தான் வருவேன். நீதான் கோபமா போறயே”

“எனக்கு கோபமில்ல போ”

“நிஜமா”

“நிஜமா” என்றான் கிருஷ்ணா.

“இன்னும் ஏன்டி நின்னுட்டு இருக்க . போ இங்க இருந்து”

“இல்ல நீ பகோபமா இருக்க தானே?”

“ஆஆஆ.. புரிஞ்சிக்கோ டி நான் சுச்சு போகனும்”

“அடச்சி நான் கூட பயந்துட்டேன், எங்கே கோச்சிட்டு ஓடுறியோன்னு”

“நான் கோபமில்லை’ன்னு சொல்லலையே”

“கிருஷ்ணா… ஆஆஆ” ராதா தன் இரு விழிகளை உருட்டி மிரட்டினாள்.

பின் வந்து மாதவனும் அனுவும்… பெக்கபெக்க’ன்னு சிரிச்சிட்டு இருந்தார்கள்.

“அடப்பாவி, பாஸ் நான் கூட கோச்சிட்டு வந்திங்கன்னு பயந்தே போய்ட்டேன்”

“இப்போ இந்த பட்டிமன்றம் அவசியமா. ச்சி நிம்மதியா போக விடுங்கடா” கிருஷ்ணா மறைவான இடத்தை நோக்கி ஓட.

“சரி அந்த மிட்டாய் கடைக்கிட்ட வந்திடுங்க இரண்டு பேரும்”

மாதவனவையும் விட்டுவிட்டு இரண்டு பெண்களும்.. சில இனிப்புகளை வாங்க ஆயத்தமானார்கள்.

அந்த தெரு முழுக்க தேர் போல அடுக்கி வைத்திருந்தார்கள் தேர் மிட்டாயை.

“ராதா இது எதுல செய்றாங்க” வாயில் ஒரு பெரிய சைஸ் தேர் மிட்டாயை திணித்தாள்.

“சக்கரை அண்ட் தேங்கா போட்டு இருப்பாங்க மாமா வைட் கலர் சாக்லேட் மட்டும் தான் வாங்கி தருவாங்க”

“ஏன் எல்லாம்ஒன்னு தானே”

“கலர் போட்டு இருக்குல. அதுலாம் தான் ஹெல்த்தி இல்லைன்னு சொல்லுவாங்க”

இவங்க வாங்கி முடிக்கவும் இருவரும் அமைதியாக வந்தார்கள்.

திருவிழாவை முடித்துக்கொண்டு காரில் ஏறி பறந்தார்கள். சிறிது தூரத்தில் அதியமான் கோட்டையில் இருந்த காலபைரவன் கோவிலை கடக்கும் போது.

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now