18 காதலன்!
பழையதை நினைத்தவளுக்கு ஒன்றுதான் உறுத்தியது.
எல்லோரையும் நான் பாரமாகவும் அடிமையாவும் தான் வச்சி இருக்கேன், இனி அப்படி இருக்கக் கூடாது.
வானத்தை பார்த்துக்கொண்டு நின்றிருந்த ராதா பழைய நினைவுகளை மீட்டவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
கண்ணீரை துடைத்துக் கொண்டவள்.
வானத்தை அன்னாந்து பார்த்தாள்.
அவளது கண்ணீருக்கு போட்டி போடும் வகையாக மழை நீர் அவளது கன்னத்தை நனைத்தது.
"ஏய் செல்லம்... நீயும் எனக்கு போட்டி போடும் வகையில் வந்துட்டியா, லவ் யூ தங்கம்"
வானத்தில் அன்னாந்து கையை வான் நோக்கி உயர்த்த மழை கொட்டோ கொட்டோன்னு கொட்ட, அதில் நன்கு ஆட்டம் போட்டாள், அனுவும் சேர்ந்து ஆட்டம் போட ராதா அருகில் நின்று இருந்தவளை அனு இழுத்து ஆட.
சிறிது சிறிதாக விளகியவள்... அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
உள்ளே மறைவாக அமர்ந்தவள். முகத்தை இரு காலுக்கு இடையில் புதைத்துக் கொண்டாள்.
"ஏன் கடவுளே என்னை கொல்லுற, எதுக்கு என்னை ஒழுங்கா படைக்கலை, எதுக்கு என் குடும்பத்தை என் கூட இருந்து பிரிச்ச. எனக்கு அம்மா அத்தை இருந்திருந்தா, என் தவறை சுட்டிக்காட்டி என்னை நல்லா வளர்த்து இருப்பாங்க இல்ல. எதுக்கு என் குடும்பத்தை எடுத்துக்கிட்ட, கண்ணா கூட இப்படி எல்லாம் இருக்க ஆசைப்பட்டேன். அது உனக்கு பிடிக்கலையா, உனக்கு என்ன நான் ஆசைப்பட்டது எனக்கு தேவையானதை எல்லாம் பிரிக்கனும் அது தானே உனக்கு. கிருஷ்ணாக்கு வேற நான் பாரமாக இருக்கேன் "
மாதவன் ராதாவை பின் தொடர்ந்து வந்தவன் அவள் அழுவது பொறுக்காமல் அருகில் அமர்ந்தான்.
"ராதா" கண்ணின் குரல் கேட்டதும்.
தாய் கண்ட சேய் போல தாவி அவனது கையை பிடித்தவள் விம்மி அழுதாள்.