19

218 12 5
                                    

19... காதலன்!

"உன்கிட்ட எல்லாம் மனுசன் பேசுவானா? எங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சி பேசி டிவோஸ் வாங்கி மாதவனை பிக் அப் செய்யலாம்'ன்னு தானே பார்க்கற... உன் புத்தி ஏன் இப்படி போது ராதா, முன்ன எல்லாம் நீ இப்படி இல்லையே?" அனு கொந்தலித்தாள்.

"பாருடா கரெக்டா கண்டு பிடிச்சிட்ட"

"ச்சி உன்கிட்ட மனுசன் பேசுவானா இனி என்கிட்ட பேசுற வேலையை வச்சிக்காத"

"சந்தோஷம்... இன்னும் கொஞ்ச நாளுக்கு அமைதியா இரு, எங்க இரண்டு பேர்க்கு நடுவில் வராத"

"ச்சி, நீ எல்லாம் பொண்ணே இல்லை"

"பாருடா, இப்போ தான் தெரியுதா, நான் பொண்ணு இல்லைன்னு"

"உன்னை ரகுவரன் அங்குளும் பாஸும் கெடுத்து வச்சி இருக்காங்க, அவங்களை சொல்லனும்"

"போதும் உங்கள் சொற்ப்பொழிவு... இடத்தை காலி பண்ணு"

"ச்சி... போ உன் வழியில் கூட இனி நான் வரக்கூடாது"

"சந்தோஷம்"

"போடி" அனு ஆத்திரமாக மாடிப் படியை இறங்கிப் போகும் போது.

"அனு அப்படியே கண்ணாவை வரச்சொல்லு"

"முடியாது போடி"

"திமிரு பிடிச்சவளே... இவளை எல்லாம் திருத்தவே முடியாது"

"அனு என்னாச்சி திட்டிட்டே வர, யாரை இப்படி வதக்கிட்டு வர" தோட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மாதவன் காதில் சரியாக பட.

'இவ எதுக்கு நம்மை கூப்பிட்டு விடுறா?'

"உன்னை சத்தியமா அவ கூப்பிடலை உங்க அம்மா தான் கோழியும் காடையும் அறுக்க கூப்பிட்டாங்க" அனு மாதவன் கையைப்பிடித்து இழுத்து போக.

மேல் இருந்து ராதா அனுவையும் மாதவன் கை கோர்த்து நடந்து போவதையும் அவன் அம்மாவுடன் அனு சிரித்து பேசுவது, தாரகையுடன் விளையாடுவதையும் மாறி மாறி பார்த்தவள்.

இப்படி எல்லாம் இருவரும் நினைத்தது நடந்தது, ஆனால் அது அனுவுடன்.

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now