22

211 10 2
                                    

22

"அவ் டேர் யூ என் மேலையே கையை வைப்ப"

ரத்தம் வடிய அவன் கத்த.

"ஏன்டா பொறுக்கி பயலே அதான் விவரமா சொன்னேனில்ல, இப்படி இப்படி ஆகிடுச்சின்னு. பிடிக்காதவன் மூடிட்டு உன் வீட்டில் இருந்திருக்கனும். மாட்டை வாங்க போரவன் போல கேட்ட சரி, எங்க வீட்டு பெண் பேரில் தப்பு இருக்கு கேள்வி எழத்தான் செய்யும்ன்னு விட்டுட்டேன். ஏன்டா ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசனும்னு தெரியலை"

"ஆறு வருசம் லவ் பன்றவ தப்பு செஞ்சி இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்"

"டேய்..." கிருஷ்ணா அழைத்த அழைப்புக்கு நாலு செக்கியூரிட்டி உள்ளே வர.

"இவனை துவச்சி காயப்போடுங்கடா"

அடி வெளுத்துவிட்டார்கள் பெண் பார்க்க வந்தவனை.

ராதா சிலைபோல அமர்ந்து இருந்தாள்.

"ராதா... இனி வேண்டாம் நீ இங்கவே இருந்திடு தங்கம், வேணா இந்த கல்யாணமே வேண்டாம்"

"கிருஷ்ணா நான் எதும் தப்பு பண்ணலை டா, நேரில் கூட ஒரே நாள் தான் பேசி இருக்கேன்" இதையே திரும்ப திரும்ப சொன்னால்.

"என் தப்புதான் பொண்ணா அடங்கி இருந்தா அவனுக்கு என்னை பிடிச்சி இருக்குமில்ல. நோ சொல்லிட்டு என் வேலை பார்த்து இருக்கனும். கண்டவன் எல்லாம் என்னை விர்ஜின்னான்னு கேட்கரான்" பைத்தியம் பிடித்தவள் போல உளறினாள்.

"எனக்கும் ஆசை இருக்குமில்ல எதுக்கு அது எல்லாம் சிதைந்தது. எதுக்கு காதல் மயக்கத்தில் வச்சி இருக்கனும். என் கேரக்டர் முதலிலே தெரியுமில்ல அப்பவே விட்டு போயிருக்கலாமில்ல. எனக்கு முன்னவே தெரியும் இவன் போயிடுவான்னு, தெரிந்தும் அவன் ஆசை வார்த்தைக்கு மயங்கியது என் தப்புதான்" தேம்பி அழுதவள்.

"எனக்கும் நிறைய டிரீம்ஸ் இருந்தது மாமா, காலேஜ் போய் நல்லா சைட் அடிக்கனும்னு. எந்த நேரத்தில் அவனை பார்த்தேனோ அப்பவே நான் வேற யாரையும் சும்மா கூட பார்க்கலை. நான் அவனை பார்த்தே இருக்க கூடாது மாமா, என் தப்பு தான்"

மனைவியின்...காதலன்!Where stories live. Discover now