Sudum Nilavu Sudatha Suriyan - 24

769 89 96
                                    

சுடும் நிலவு சுடாத சூரியன் – 24

சித்தார்த்தின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததும், ஸம்யுக்தாவிற்கு கோபம் வந்தது. அவன் எதிரே எதற்கு யோசிக்க வேண்டும் என்று தன்னை தானே நொந்து கொண்டாள். அவன் நோக்கம் புரிந்து தான், அவனை தவிர்ப்பதற்காக சசி மேல் காதலிருப்பதாக சொன்னாள். வேண்டுமென்றே மிஸஸ் ஸம்யுக்தா சசிதரன் என்று சொல்லி, அவனை விலக்க முயற்சித்தாள். ஆனால் அவன் உண்மையாக சொல் என்று சொன்னவுடன், ஏன் அப்போது அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அவன் கேட்டவுடன் நான் இன்னும் சசியை காதலிக்கிறேன் என்று சொல்ல விடாமல் எது தடுத்தது என யோசித்தாள்.

தான் ஒன்றும் சசியை இப்போது காதலிக்கவில்லை என்று சொல்லவில்லையே. அவனே எதையோ பதில் என்று நினைத்துக் கொண்டால், அதற்கு எந்த விதத்திலும் தான் பொறுப்பில்லை என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த், "வாவ், ஒரு நிமிஷத்தில் உன் முகத்தில் எத்தனை எக்ஸ்பிரஷன், பியுட்டிஃபுல்" என அவளை ஆசையுடன் பார்த்துச் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டதும், தன் முகத்தை மறைப்பதற்குக் குனிந்து கொண்டாள்.

"பாட்டி சரியாக தான் சொல்லியிருக்காங்க, நான் பொண்ணுங்க வெட்கப்பட்டு பார்த்ததில்லை. தமிழ் பொண்ணுங்க இத்தனை இண்டிரஸ்டிங்கா இருப்பாங்க என்று எனக்குத் தெரியாது" என ஆழ்ந்த குரலில் சொன்னான்.

தன் முகத்தை மறைப்பதற்குக் குனிந்ததை, அவள் வெட்கப்பட்டு குனிந்ததாக நினைத்து விட்டான் என புரிந்த போது எரிச்சலாக வந்தது.

"நான் வெட்கப்படலை. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க" என எரிச்சலாக சொன்னாள்.
"ஒ, இஸ், இட்" என்றவன், அவளது வலது கையை எடுத்து, அவள் விரல்களை ஆர்வத்துடன் பார்த்தான்.

அவனது கரம் அவள் கையை பற்றியவுடன், தனக்குள் ஏற்பட்ட இனிய அதிர்வை பற்களை கடித்து அடக்கிக் கொண்டாள். எந்த உணர்வையும் வெளிகாட்ட கூடாதென்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

Completed - Sudum Nilavu Sudatha SuriyanWhere stories live. Discover now