என்னவன் 8😍💕

2.7K 94 3
                                    

சிவா நான் கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் கதிருக்கும் சரியென மனதில் பட்டது..

உடனே சௌமிக் கிட்டப் போய் சாப்பாட்டைக் கொடுத்து விட்டு விவரத்தைச் சொன்னான்..

இவர் என் நண்பர் தான்..

நம்பிக்கையானவர்..

அவரும் சென்னைக்கு தான் போறார்..

உங்களைக் கொண்டுட்டு போய் உங்க அக்கா வீட்லயே விட்ருவார்..

நீங்க இவரோடப் போங்கன்னு சொன்னதும்

இல்லை அண்ணா..

அவர் கூட எப்டிப் போக முடியும் தெரியாதவர் வேற..

நீங்க இந்த மோதிரத்தை விற்றுத் தாங்க..

நான் அந்தப் பணத்தை வைத்து ஊருக்குப் போய்க்கிறேன்னு சௌமி சொன்னாள்...

இந்த நேரத்துல அடகுக் கடைலாம்  இருக்காதுமான்னுக் கதிர் சொல்லிட்டு சரி இன்னும் ரெண்டு மூணு ஸ்டாண்ட்லப் போய் பாப்போம்..

நீ பேக்கை தவற விட்ட ஆட்டோ நிக்குத்தானு சொல்லிட்டு
மறுபடியும் சிவாவும் ஆட்டோவில் ஏறிக்கொள்ளவே ஆட்டோ கிளம்பியது..

அவங்களும் தேடி பார்த்தாங்க ஆனா அந்த ஆட்டோ இல்லை..

இவங்க இப்படியே தேடிட்டு இருக்கும் போது அங்கே ஆட்டோ ஸ்டாண்ட்ல இருந்தவங்க சந்தேகப்பட்டுக் கதிர் கிட்ட வந்து..

என்ன ரெண்டு பேரும் ஒரு பொண்ணையும் ஆட்டோக்குள்ள வச்சுட்டு எல்லா ஆட்டோ காரவங்களையும் கைக் காட்டிக் கேட்டுட்டு இருக்கிங்கன்னு கேட்டதும்..

கதிர் பேக்க தவறவிட்ட விஷயத்தை  சொன்னான்...

அப்புறம் அங்க இருந்த இன்னொரு ஆட்டோ டிரைவர் சௌமியிடம் நான் வேணும்னா உதவி பன்னவா னு கேட்கவும் இவ பயந்து பதறி இல்ல வேணான்னு சொல்லிட்டுக் கதிர் ஆட்டோக்குள்ளப் போய் உட்கார்ந்துட்டா...

அம்மா அப்பா போன் நம்பரையாவது மனப்பாடம் பண்ணி வச்சுருந்துருக்கலாம்னுத் தன்னையே நொந்துகிட்டாள்..

அம்மா.. அக்கா பையனுக்காகக் கொடுத்து விட்டச் செயின்,
அக்காக்கு கொடுத்த சேலை, நகை, பணம் எல்லாம் அந்த பேக்கோடவே போயிருச்சேன்னு நினைச்சு சௌமிக்கு இன்னும் அழுகை வந்தது..

சௌமியோட அக்கா பெயர் கவிதா..

பெரியம்மா மகள்..

காதல் திருமணம் நாள யாரும் அவக் கூடப் பேசிக்க மாட்டாங்க..
வீட்லயும் சேர்த்துகல்ல..

ஆனா சௌமிக்கு கவிதானா உசுரு..

அவ அப்பாக் கிட்ட அடம் பிடித்துக் கவிதாவைப் பாத்துட்டு வர  ரெம்ப நாளா போராடி அனுமதி வாங்கினாள்..

இப்போ வீட்டுக்கு போனா அப்பாவும் திட்டுவங்க எவ்லோக்கு எவ்ளோ பாசமா இருக்காரோ அவ்ளோக்கு அவ்ளோ சில விஷயங்கள்லக் கண்டிப்பாவும் இருப்பாரு சௌமி அப்பா ரவி...

பயந்து போய் தன்னிலை மறந்து உட்கார்ந்துட்டு  இருந்த சௌமியை சுய நினைவுக்கு கொண்டுட்டு வந்தது கதிரின் குரல்..

சிவாவை முன்னாடியே வச்சுக்குட்டு இவர் என் நண்பர் ரெம்ப நம்பிக்கை ஆனவர் இவர் கூட சென்னைக்குப் போங்க..
பாதுகாப்பா போய் சேர்த்துருவார்..

இல்லைனா, இப்போ வந்த மாறி எல்லோரும் வந்து என்ன என்னனு கேப்பாங்க உங்களை இங்க தனியாவும் விட்டுட்டு போக முடியாது ரெம்ப லேட்டா ஆகிருச்சு இல்லைன்னா மகளிர் காவல் நிலையத்தில் போய் உங்களை விட்டுறேன் அவங்கப் பாத்துப்பாங்கன்னுச் சொன்னதும்

அய்ய்யோ🙄 அதெல்லாம் வேணாம் நான் இவரோடவே போறேன்னு சொல்லிட்டா சௌமி..

ஏதோ ஒரு நம்பிக்கை சிவா மேல் வந்தவளாக..

சிவாவும் சௌமிக்கு ஆறுதலாக பயப்புட வேணாம் நான் பாதுகாப்பா கூட்டிட்டு போறேன்னு சொன்னான்..

சென்னை பஸ் ல ஏறுனாங்க ..

ரெண்டு பேரும் வேற வேற சீட் ல போய் உட்கார்ந்தாங்க..

மதுரையில் இருந்து சென்னை நோக்கிய பயணம் தொடங்கியது... 

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now