சௌமிக்கு உடல் அனலாய் கொதிக்க ராதாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னாள் சௌமி.. அவள் வந்து சௌமி நடுங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியாகி கவிதாவுக்கு சொல்லிவிட்டு சௌமியை ஹாஸ்பிடல் க்கு கூட்டிட்டு போனாள்
அங்கே கவிதாவும் வர blood test எடுத்தத்தில் typhoid என்று வந்தது...
சௌமிக்கு கொஞ்ச நாள் முன்னாடி வரை பணம் கொடுத்து கொண்டிருந்த லட்சுமி அதை நிறுத்தி விட்டாள்... இது கொடுப்பதால் தானே அவள் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்றா... இனி கொடுக்க மாட்டேன் அப்படியாவது அவள் இங்க வரட்டும் என்ற நப்பாசயில்..
ஆனால் சௌமி வேலைக்கு சென்றதால் அந்த கஷ்டம் தெரியாமல் இருந்தது..
இப்போ treatment-ற்கு வச்சுருந்த காசை எல்லாம் செலவு பண்ணினாள்..கழுத்தில் போட்டுறந்த இரு செயினில் ஒன்றை விற்றாள்.. லட்சுமிக்கு சௌமிக்கு காய்ச்சல் என்ற விஷயமும் தெரிவிக்கப்பட்டது..
அவர்கள் அப்போவும் கூப்பிடும் போதும் வர மாட்டேன் என்று மறுத்து விட்டாள்..அவர்களாலும் ஒன்னும் செய்ய முடியவில்லை..
அவளுக்கு தேவையான அனைத்தையும் கூடவே இருந்து ராதா பார்த்துக்கொண்டாள்..
சிறிது நாட்களுக்கு பிறகு typhoid negative என்று வந்தாலும் முழுதும் குணமாகாமல் அப்பொப்போ காய்ச்சல் வந்து கொண்டிருந்தது.. வேற டாக்டரை பார்க்கலாம் என்று சௌமி scooty எடுத்துக் கொண்டு கிளம்பினாள்..சிக்னலில் நிற்கும் போது லேசாக தலை சுற்றவே பச்சை விளக்கு போட்டும் அவளால் நகர முடியாமல் தடுமாறி நின்று கொண்டு இருக்க பின்னால் வந்த பைக் அவள் மேல் மோத நிலை தடுமாறி கீழ விழுந்தாள்.. அதில் சைலேன்சர் பட்டு கையின் ஓரமெல்லாம் சுட்டது..அதில் இடது கையின் ஓரமெல்லாம் வெந்து போக அங்கே இருந்தவர்கள் அவளை தூக்கி விட்டு ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அப்புறம் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவளை மருத்துவமனையில் சேர்த்தார்கள்..
அவள் போனில் இருந்தே யாருக்குக் கூப்பிட என்று விசாரித்துவிட்டு கவிதாக்கு விஷயத்தை சொல்ல அவள் ராதாவையும் கூட்டி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்...
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌