என்னவன்36😍💕

1.8K 59 8
                                    

லட்சுமியும் போன் போட்டு சௌமியை திட்டி தீர்த்தாள்.. அவள் எதற்கும் பதில் சொல்லாது அமைதியாகவே இருந்தாள்..

சிவா அங்கேப் போனதும் மணி அவனை திட்ட," ஏன்டா காலைல போனவன் இப்போ தான் வர?? என்னை மறந்தே போய்ட்டியா??" என்றதும் இல்லடா இதெல்லாம் நடந்துச்சு என்று சொல்லி முடித்தான்... சரி வாடா போலாம். அப்பா ph பண்ணிகிட்டே இருக்காரு என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்...போனதும் கிரிஷ்ணனிடமும் வாங்கி காட்டினார்கள்..மறுநாள் இருவரும் லண்டன் சென்றடைந்தனர்...

மறுநாள் சௌமியை பார்க்க அவன் தம்பி சங்கர் வந்திருந்தான்.. இருவரும் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.அவனும் அவன் பங்குக்கு வாக்கா வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட்டு கொண்டே இருந்தான்..." இல்ல நான் வர மாட்டேன்" என்று இவளும் சொல்லி கொண்டிருந்தாள்..

ரம்யாவும் சங்கரும் அடிக்கடி சௌமிக்கு கால் பண்ணிக் பேசிக்கொண்டு தான் இருந்தனர்...

அவன் பிறந்தநாள் பரிசாக சௌமிக்கு ஒரு போன் வாங்கிட்டு வந்து கொடுத்தான்..கொஞ்ச நேரம் இருந்து ராதா சாப்பாடு செய்து கொடுக்க சாப்பிட்டுவிட்டு தான் சென்றான்..

அடுத்து வந்த நாட்கள் வெகு சீக்கிரமாக  கழிய அப்பொப்பொ வந்து சௌமி வீட்டில் இருந்து வந்து கூப்பிடுவதும் அவள் வர மாட்டேன் என்று மறுப்பதும் கதையாகி போக அவர்களும் இவளை அப்படியே விட்டு விட முடியாது என்று செலவுக்கு காசும் கொடுத்து விட்டு செல்வார்கள்..

சௌமி அந்த அறையிலேயே தனியாகவே இருப்பாள்.. ராதாவிடம் கூட அவ்வளவு பேசுவதும் இல்லை..
இப்படியே ஒரு வருடம் ஆனது...
அதுவரை சிவாவும் சௌமிக்கு போன் போடவில்லை..

யாரிடமும் பேசாது தனியாகவே இருக்கவும் மன அழுத்தம் உண்டாகி தனக்கு தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தாள்.  அதையும் யாரும் கவனிக்கவில்லை..

ஒரு நாள் எதேச்சையாக துணிக் காயப்போட கீழ் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பார்வதி வர சௌமி ரூமில் பேச்சு சத்தம் கேட்கவும் அவள் வீட்டில் டிவி யம் இல்லை அவள் மட்டும் தான இருக்கிறாள் என்று தோன்றியவளாக சௌமி சௌமி என்றுக் கதவை தட்டினாள்.. ரெம்ப நேரத்துக்கு பிறகு கதவை திறந்த சௌமி," என்னக்கா??" என்று கேட்க... யார் கூட பேசிட்டு இருந்த என்று பார்வதி உள்ளுக்குள் யாரும் இருக்கிறார்களா என்று கண்களை அலை பாய விட யாரும் இல்லைக்கா என்றாள் சௌமி..

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now