என்னவன்33😍💕

1.7K 59 10
                                    

பஸ் எடுக்கப் போகும் சமயம் சிவா காலில் ரத்த காயங்களுடன் நொண்டி நொண்டி நடந்தவாரே சௌமி இருந்த ஜன்னல் பக்கத்தில் வந்து நின்றான்...

அதைப் பார்த்தவள் ஏங்க என்ன ஆச்சு?? ஏன் இப்படி ரத்தம் வருது?? என்னாச்சு?? என்று அதிர்ச்சியாகக் கேட்க, " அதுச் சின்ன விபத்துங்க" என்றுச் சொன்னான்..

என்ன விபத்து..கொஞ்சம் நேரம் முன்னாடிப் பேசுனப்போக் கூட நல்லாத்தானப் பேசுனிங்க.. என்னாச்சு அதுக்குள்ளனுக் கேக்க, இல்லைங்க ரெம்ப நாளுக்கு அப்புறம் உங்களை பார்க்க போறேன்ங்ர ஆவல்ல  எதுவும் வாங்காம வந்துட்டேன்... உங்கக் கிட்டப் பேசி முடுச்சதும் தான் ஏதாச்சும் உங்களுக்கு கிப்ட் பண்ணனும்னு தோணுச்சு.. நானும் மணியும் தான் உங்களைப் பார்க்க வந்தோம்... பைக்ல தான் வந்தோம்... அதனால பைக்கில் போய் உங்களுக்கு ஏதாச்சும் நீங்க வர்றதுக்குள்ள வாங்கிட்டு வரலாம்னு பார்த்தோம் அதுக்குள்ள  போற வழில சின்ன விபத்து ஆகிருச்சு..

மணிக்கு தான் நல்ல அடி😢..
நாங்க கீழ விழுந்ததும் கூட்டம் கூடிருச்சு.. அவன் என்னய ஒதுங்கிப் போய் நிக்கச் சொன்னான்... உங்களை வந்துப் பார்க்கச் சொன்னான்.. போலீஸ்லாம்  வேற வந்துருச்சு... அவனை ஆம்புலன்ஸ்ல ஏத்திக்கிட்டுப் போய்ட்டாங்க என்றுச் சொல்லி முடித்தான்..

ஏங்கக் கால்லாம் ரத்தம் வருது... நீங்களும் போயிருக்கலாம்ல என்றுக் கேட்டாள் சௌமி... இல்லைங்க உங்களை பார்க்கணும் அதான் வந்துட்டேன் என்றான்.. சற்று அதிர்ந்து தான் போனாள் சௌமி... பஸ் கிளம்பியது..

ஜன்னல் கம்பியைப் பிடித்து நடந்து இல்ல ஓடிக்கொண்டே நான் மறுபடியும் உங்களைப் பார்க்க வருவேங்க என்றுச் சொல்லிவிட்டு ஓட பஸ் வேகம் பிடித்து அவனையும் தாண்டிப் போனது..

அப்படியே முட்டியில் கை வைத்தவாரே பஸ்சைப் பார்த்தபடியே நின்றுக் கொண்டிருந்தான் சிவா..

அவளுக்கு வீட்டுக்கு போனாலும் ஒரே சிவா நினைப்பாகவே இருந்தது.. மணியை வேற ஆம்புலன்ஸ் ல ஏத்திட்டு போயிருக்காங்க.. அப்போ அவ்ளோ  சீரியசா அவருக்கு என்ன ஆகிருக்கும்😣 இவர் கால்லயும் ரத்தமா வந்துட்டு இருந்துச்சே 😞என்ன ஆச்சுன்னுத் தெரியலையே என்று ஒரே பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது சௌமிக்கு....

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now