என்னவன்30😍💕

1.8K 63 14
                                    

"ஏங்க நான் சிவா பேசுரங்க" என்று சொன்னதும் மறுபடியும் நீங்களா?? என்று அதிர்ச்சியில் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள் சௌமி..

ஆமாங்க நான் தான்...
பிரச்சினை என்னாச்சு?? நீங்க வீட்டுக்கு போய்ட்டீங்களா?? உங்களுக்கு என்ன ஆச்சுங்கிற பயத்துல தான் கூப்பிட்டேன் என்று ஒரே மூச்சில் அனைத்தையும் கேட்டு முடித்தான்..

அதிர்ச்சியில் இருந்து மீண்டவளாக சௌமி அதெல்லாம் இருக்கட்டும் உங்களுக்கு எப்படி என் நம்பர் கிடச்சுச்சு.. நான் தான் தரவே இல்லையே என்று யோசித்தபடியேக் கேக்க, "அதெல்லாம் அப்படிதாங்க" என்று சிவா சொன்னதும்..நானே பயங்கர கோவத்துல இருக்கேன் உண்மைய சொல்றிங்களா இல்லையா என்று கத்தினாள் சௌமி..

அதை உணர்ந்தவனாக, நீங்க கேட்ட அப்புறமும் தரளனு சொல்லிட்டீங்க.. விதியாப் பார்த்து நீங்கத் தூங்கும் போதுப் போனேக் கீழப் போட்டிங்க... அதை எடுக்கும் போது உங்க நம்பெறயும் எடுத்துட்டேங்க என்று தயங்கியபடியே சொன்னான்..

அதன் பிறகும் சௌமி அமைதியாக இருக்க ,சிவாவே தொடர்ந்தான்... சொல்லுங்க இப்போ எங்க இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா என்று கேக்க எப்படிங்க நல்லா இருக்க முடியும்... இனியும் என் வாழ்க்கைல தயவுசெய்து வராதிங்க ...உங்கனால ஏகப்பட்டக் கஷ்டத்தை அனுபவிச்சுட்டு இருக்கேன்.. இதுக்கு அப்புறம் நான் எப்படியும் போறேன்.. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும் நீங்க வராதிங்க என்று லட்சுமி மேல் இருந்த கோபத்தையும் சேர்த்து அவனிடம் காட்டி அழுகையும் கண்ணீருமாக சொல்லி முடித்தாள்..

இவ்வளவு நாள் முழுவதும் அதட்டலுடன் சொன்னவள் இப்போ உடைந்து போய் அழுகையுடன் சொன்னது சிவாவை ஏதோ செய்தது..

சரிங்க இனி உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்..
ஆனா உங்களை ரெம்ப மிஸ் பண்ணுவேன்😣 உங்க குரலை😢 உங்க சிரிப்பை😞 உங்க கோபத்தை😖 எல்லாத்தையும்☹️

சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்,
" மிஸ் யூ" ங்க என்று சொல்லி விட்டு போனை வைத்தான் கண்ணீருடன்..

என்னவன் 😍💕 (Completed)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon