என்னவன்34😍💕

1.7K 56 17
                                    

சிவா, " விஷயம்லாம் ஒன்னும் இல்லைங்க" அது வந்து என்றுப்  பேசத் தொடங்கும் முன்னே விஷயம் தான் இல்லைல அப்புறம் எதுக்கு கால் பண்றிங்க நான் வைக்கிறேன் என்று வைக்கப் போனாள்.. ஹலோ ஹலோ வைக்காதீங்க விஷயம் இருக்கு என்றான் ....என்ன?? என்று  சௌமி கேட்க, " முன்னாடி சொன்னது போலவே நான் லண்டன் போறேங்க".. அதுக்கு முன்னாடி உங்களை பார்க்கணும் என்று சொல்ல வழக்கம் போல இவனும் கெஞ்ச முடியவே முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபடும் போது சௌமி தான் இப்போது முகப்பேரில் உள்ளதையும் உளறி கொட்டினாள்..

சரிங்க  26ஆம் தேதி எனக்கு flight உங்களை பார்க்க 25ஆம் தேதி கண்டிப்பாக பார்க்க வருவேன் என்று சொல்லிப் போனை வைத்தான்..

சௌமியின் பிறந்தநாளும் 25ஆம் தேதி தான்...ஆனா அவனுக்கு தெரியாதே😉

இங்கேயே இருந்தால் இதே நினைப்பாக இருக்கும் என்று நினைத்தவளாக கவிதா வீட்டிற்கு கிளம்பி போனாள்.. அங்கேப் போனதும் கவிதாக் சௌமியை ஷாப்பிங் செய்யக் கூட்டிக்கொண்டுப் போனாள். அவளே இந்த பிரச்சனையில் மறந்திருந்த அவளுடைய பிறந்தநாளை நியாபகம் வைத்து அவளுக்கு புது ட்ரெஸ் எடுத்து கொடுத்து அனுப்பி வைத்தாள் கவிதா .

மூன்று நாட்கள் கழித்து...

சிவா,அவன் அப்பா கிருஷ்ணன் ,மணி மூவரும் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு  24ஆம் தேதி இரவு சென்னைக்கு கிளம்பினார்கள்..அங்கு போய் சேரக் காலை ஆனது.. மூவரும் ஒரு ரூம் எடுத்து தங்கி பிரேஷ் ஆகிட்டு சிவாவும் மணியும் ஒரு நண்பரைப் பார்த்து விட்டு வருவதாக கிருஷ்ணனிடம்  சொல்லிவிட்டுச் சௌமியை பார்க்க கிளம்பினார்கள்..

சௌமிக்கு நல்ல தோழியாகி போனாள் அந்த வீட்டு ஓனர் கவிதாவின் தோழி ராதா...
சௌமியா இருந்த இடம் மொட்டை மாடியில் ஒரு சின்ன அறை மட்டுமே.. மொட்டை மாடி என்பதால் துணிக் காயப்போட அனைவரும் மேலே தான் வருவார்கள்..அது போல ராதாவும் அங்கு வரச் சௌமி அவளைப் பார்த்ததும் அவள் ரூமிலிருந்து வெளியே வந்து ராதாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now