என்னவன்27😍💕

1.8K 66 15
                                    

பாட்டிச் சொன்னதும் சௌமி அழுதுக்கிட்டு வெளியேறியும் வீட்டில் சண்டை ஓய்ந்தப்பாடில்லை..

அவள் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாள். பின்னாடி ஒரு ஆள் வருவது போல் தெரிந்தது சௌமிக்கு.. அப்போ மணி 10 ஆகிவிட்டது. அந்நேரத்தில் யாரும் அங்கு இருக்கவில்லை.. பயந்து நடுங்கிக்கிட்டே திரும்பி பார்த்தாள் . இப்போவும் உங்க யூகம் சரி தான் அது நம்ம சிவா தான் 🤷

அவன் எதற்கு போகாம அங்கேயே நின்றான்னா, அவனாளாதான் இவ்வளவு பிரச்சனைகளும். அதுனால சௌமிக்கு எதுவும் விபரீதம் நடந்துர கூடாது, எதுவா இருந்தாலும் என்னக் கடைசில நடக்குதுன்னுப் பார்த்துட்டு தான் போகணும்.
" அவளுக்கு ஆபத்து வர நான் விட மாட்டேன்னு உறுதியா மனசுக்குள் நினைத்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தான்".

சிறிது நேரதில்லையேச் சௌமி அழுதுக் கொண்டு வெளியே வரவும் அவளைப் பின்தொடர்ந்தான்.

அதை சௌமி கவனித்து விடவே,"ஏங்க என் பின்னாடி வர்றிங்க, இப்போவச்சும் நிம்மதியா என்னை விடுங்க எல்லாமே முடுஞ்சு போச்சு இந்தாங்க உங்க போன்(ரவி தூக்கி வீசியதும் பேட்டரி தனியாக போன் தனியாக விழுந்ததை சௌமி எடுத்து வைத்திருந்தாள்) உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம். உங்க எல்லா உதவிகளுக்கும் ரெம்ப நன்றி. இனி என் வாழ்க்கைல வராதிங்க தயவு செஞ்சு கிளம்புங்கன்னு சௌமி சொல்ல, எப்படிங்க உங்களை இந்த நேரத்துல தனியா விட்டுட்டுப் போவேன். நானும் வர்றேங்கன்னு மறுபடியும் சிவாச் சொன்னதைக் கேட்டதும் சௌமி கோபத்தின் உச்சிக்கே சென்றாள் . அய்யா சாமி இதோட உங்க உதவியே எனக்கு வேணாம்🙏 நீங்க ரூம் போற்றுக்கேன்னு சொன்னிங்கள்ல அங்கப் போய் தங்கிட்டு, உங்க ஊரைப் பார்த்துக் கிளம்புங்க.
நான் என் அக்கா வீட்டுக்கு போறேன்.

அன்னைக்கு என்கிட்டப் பணமில்லை. இன்றைக்கு என்கிட்ட பணம் இருக்கு நானே போய்கிறேன் என்ன பார்த்துக்க எனக்கு தெரியும், நீங்க கிளம்புங்க என்று கத்தினாள்..

சரி நான் போயிரெங்க ஆனா சென்னை பஸ் ல உங்களை ஏற்றி விட்டுட்டுப் போறேங்க.அதுக்கு அப்புறம் உங்களை தொந்தரவுப் பண்ண மாட்டேன்னு சொன்னான் சிவா .

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now