என்னவன்12😍💕

2.5K 82 0
                                    

அவங்க இறங்குறதுக்கு இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது...

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒவ்வொருவராக இறங்க தொடங்கினர்..

சிவாவும் தலைலாம் வாரிட்டு சட்டைலாம் சரி பண்ணிக்கிட்டு இருந்தான்..

அப்போ சௌமி ஏங்க அடுத்த ஸ்டாப்லேயே இறங்க போறிங்களான்னு கேட்டாள்..

இல்லைங்க சும்மா தூக்கம் வரல அதான், நான் உங்களை ஆட்டோ ல ஏத்தி விடாம உங்களை விட்டு போக மாட்டேங்கன்னு சிரித்துக் கொண்டே சொன்னான் சிவா..

அப்போ சிவா போன்க்கு கால் வந்துச்சு..

சொல்லுங்க கதிர் ன்னு சிவா சொன்னான்..

சென்னை போய்ட்டீங்களான்னு கேட்டதுக்கு இல்ல இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்னு சொன்னான் சிவா...

அப்புறம் சௌமி பற்றி விசாரிச்சான் சாப்ட்டாங்களான்னு கேட்டான்,
இல்ல அவங்க டீ மட்டும் தான் குடுச்சாங்கன்னு சொன்னான் சிவா..

அவங்களுடக் குடுக்கிறேன் நீங்க பேசுங்கன்னு சொல்லி ph சௌமிட்ட கொடுத்தான்..

அவ கதிர் கிட்ட பேசுனா..

என்னமா எல்லாம் ok தான அவர் எதுவும் னு கேட்டதும்
அய்யோ அப்டிலாம் இல்ல நா எல்லாம் ok தான் அண்ணான்னு சொன்னதும் சிவா நம்பிக்கையானவர் தான் மா அதான் நம்பி உன்னை அணுப்புனேன்னுச் சொன்னான் கதிர்..

அண்ணா நீங்க மட்டும் இல்லைனா நான் என்ன ஆகிருப்பேன்னு எனக்கே தெரியலன்னா ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா..
இந்த உதவியை என் வாழ்க்கை முழுதும் மறக்க மாட்டேன்னு சொல்லி அழுதாள் சௌமி..

சரி மா அழாத..
வீட்டுக்குப் போனதும் எனக்குக் கால் பண்ணி சொல்லுங்க,
அப்போ தான் எனக்கு நிம்மதினு சொன்னான் கதிர்..

அண்ணா டிக்கெட் காசு உங்களுக்கு அனுப்பிடறேன் உங்க acc num சொல்லுங்கன்னு சொன்னதும் அவர் தான் மா எடுத்தார் அவருக்குக் கொடுத்துருங்கன்னு சொன்னான் கதிர்..

சரிங்கன்னா னு சொல்லி ph cut பண்ணி சிவாகிட்ட ph கொடுத்தாள் சௌமி..

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now