சிவாவும் சௌமியும் அங்கே செல்ல இவர்களும் தன்னுடைய ஊரிலிருந்துக் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்...சௌமிக்கோ அவ அம்மா போன் செய்துத் திட்டிக் கொண்டே இருந்தார்கள்... அவளால் லட்சுமியின் அழைப்பை தவிர்க்கவும் மனம் வரவில்லை....
அவர்கள் சிவாக் குடும்பத்தைப் பார்க்க வந்திருப்பது அவர்களுக்கு தெரியாது..
ஜானகியிடம் மட்டும் சொன்னார்கள்... அதற்கு அவளோ, "தனியா வர சொல்லிருக்கங்க எதுவும் பிரச்சனை ஆகிட்டா என்னமா பண்றது??".. "உனக்கு பயமா இல்லையா?" எனக் கேட்க, "அதெல்லாம் இல்லைக்கா... அவங்க அப்டிலாம் பண்ணக் கூடியவங்க இல்ல".. "அப்புறம் சிவாவும் என் கூட தான இருக்காங்க அதுனால எதுவும் ஆகாது எனக்கு... நீங்க கவலைப்படாதீங்க" என்று சொல்லிவிட்டு, " அக்கா ஒரு சின்ன ஹெல்ப்... எனக்கு அவங்களை விட என் குடும்பத்தை நினச்சு தான் பயம்... அதுனால நீங்க ராதா அக்கா கிட்ட மட்டும் இந்த விஷயத்தை சொல்லிராதிங்க" என்றுச் சொல்ல, "அவளும் சரி" என்று ஒத்துக்கொண்டதும் தான் அங்கிருந்தேக் கிளம்பினார்கள்..
ஆனால் அவள் மனதுக்குள்ளும் ஒரு பயம் இருந்தது.. நம்ம அம்மா அப்பாவும் நம்மள இப்டி விடாம திட்டிடே இருக்காங்க... இவங்க வீட்ல இருந்து வர்றவங்களும் நிச்சயம் இதுக்கு ஒத்துப்பாங்களான்னு தெரியாது... அப்டி அவங்க நம்மள ஏற்றுக்கொள்ளலைனா அவங்களுட வேணாம்னுச் சொல்லிட்டு வந்துருவோம்.... "இப்டி எல்லார் மனசயும் நோகடிச்சுட்டு அப்டி என்ன வாழ்க்கை நமக்கு" என்று யோசித்தவள் சிவாவிடம் அதை சொல்லியும் விட்டாள்..
அதைக் கேட்டு அதிர்ந்தவன், " ஏங்க எல்லார் பற்றியும் யோசிக்கிறீங்க... என்னைப் பற்றிக் கொஞ்சமும் உங்களுக்குக் கவலைக் கிடையாதா??😢"...
நீங்க எனக்கு இல்லைனா நான் இப்போவே செத்து போயிரெங்கன்னு சொல்லிட்டு, "அவனுக்காகவே வைக்கப்பட்டது போல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து நெஞ்சில் கிழித்து கொண்டான்"☹️..
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌