நிச்சயம் ஆன 3 நாளில் காலேஜ் திறந்துறாங்க..
சௌமிக்கு சுத்தமா அந்த போன் பற்றிய எந்த நியாபகமும் இல்லை. அவ அவ வேலையைப் பார்த்துட்டு இருக்கா..
காலேஜ் போறதும் வர்றதும் வந்து வீட்ல உட்கார்ந்து நோட்ஸ் எடுக்கிறதும்னு சிவாவைப் பற்றி துளியும் நியாபகம் இல்லாம இருக்காள்..அங்க சிவா மெசேஜ் அனுப்பிக்கிட்டே இருக்கான்..
ஏங்க பேச மாட்ரீங்க..
மன்னிச்சுறுங்க அப்படி பேசுனதுக்கு இனிமேல் அப்படி பேச மாட்டேன் நீங்க பேசாதது ஏதோ மாறி இருக்கு தயவு செஞ்சு பேசுங்க அப்டி இப்டின்னு மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு இருந்தான்..சௌமி ph பண்ணாதீங்க வீட்ல ஆள் இருப்பாங்கன்னு சொன்னதுனால கால் பண்ணாம இருந்தான்..
இப்படியே கொஞ்ச நாட்கள் ஓடியது..
அப்புறம் ஒருநாள் சிவாவும் மணியும் பீர் குடுச்சுக்கிட்டு பேசிட்டு இருந்தாங்க..
டேய் மச்சி நான் என்னடா பண்ணேன்.. லவ் பண்ணது ஒரு குத்தமாடா...
சரி லவ் பண்ண வேணாம் atleast ரிப்ளையாவது பண்ணலாம்ல😏 அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்டானு சொல்லி அழுகுறான் சிவா...டேய் கவலப்படாதடா சீக்கிரமே புருஞ்சுபங்கன்னு மணி ஆறுதலாப் பேசிட்டு இருந்தான்..
அப்போவும் தயவு செஞ்சு பேசுங்கன்னு ஒரு மெசேஜ் அனுப்புனான்..
அப்போ அந்த போனின் அதிர்வு சத்தம் ரூம்குள்ள இருந்த சௌமிக்கு கேட்டது...
அப்போ தான் போனே எடுத்து பார்த்தாள்.
அதுல நிறைய மெசேஜ் வந்துக் கிடந்தது..
அதோட சௌமி உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டீங்களான்னு ரிப்ளை பன்னாள்..அவ்ளோ நாட்கள் எதிர்பார்த்த ரிப்ளை அப்போ அனுப்புன அந்த ஒரு ரிப்ளை அவனுக்கு உயிரே வந்தது மாறி இருந்தது..
உடனே கால் பண்ணிட்டான்..அவ இன்னைக்கு பேசி இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சுரணும்னு நினைச்சுக்காட்டு ph எடுத்துட்டு மாடிக்கு போறா..
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌