பஸ் புறப்படுவதற்குக் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி..
சிவா டிக்கெட் எடுக்கப் போயிருந்த நேரத்துல கதிர் சௌமியிடம் அவர் நல்லவர் தான் மா இருந்தாலும் இந்தா என் ph நம்பர் வச்சுக்கோ
போய் இறங்குனதும் எனக்கு கால் பண்ணுன்னு சொல்றான்..சரிங்கன்னா என்று சௌமிச் சொல்லி முடிக்க சிவா வரவும் சரியாக இருந்தது..
சௌமியும் சிவாவும் வேற வேற சீட்ல உட்கார்ந்துட்டாங்க..
பஸ் கிளம்பியது..
கொஞ்ச தூரம் போனதும் பஸ் நின்றது..
என்னன்னு பார்த்தா ஒரு ஜோடி ஏறுனாங்க..
சிவா கிட்ட அந்த பையனும் சௌமி கிட்ட அந்த பொண்ணும் இருக்கலாம்னு போனாங்க..
அதுக்குள்ள பக்கத்துல இருந்தவர் இவங்க ரெண்டு பேரும் couples தான்
தம்பி நீ மாறி இருப்பானு சிவா கிட்ட கூறவும், வேற வழி இல்லாம சிவா சௌமி பக்கத்துல வந்து உட்கார்ந்தான்..ஆனா சௌமி அப்டிலாம் இல்லைனு சொன்னாள்..
அது எதுவும் அவங்க காதுல விழல..சிவா வரும் போது அவனுக்கு மட்டும் கேட்டுச்சு..
அதோட சிரிச்சுக்கிட்டே போய் சிவா உட்கார்ந்தான்..சௌமி சிவாவ முறைச்சா..
ஏங்க அவங்கக் கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க.
இப்போ சொல்லி என்ன ஆக போகுதுன்னு சிவா கேட்டான்..இல்ல அவங்க நம்ம ஜோடி ன்னு தப்பா நினைச்சிட்டு இருக்காங்கள அதான்னு சௌமி சொன்னாள்..
அதுக்கு சிவா யார் நம்ம பற்றி என்ன நினைச்சா நமக்கென்ன
நமக்கு தெரியும்ல உண்மை என்னனு விடுஞ்சா சென்னை வந்துர போகுதுன்னு சிவா சாதாரணமா சொல்லிட்டான்..ஆனா சௌமிக்கு இங்க இருக்க முடியல..
முதல் முறையா ஒரு அந்நிய ஆணோட தனியா பஸ்ல போறா அதுவும் வீட்டுக்கு தெரியாமல்..இப்போ அந்த பெண்னேப் பக்கத்துல இருந்துருந்தாலும் பாதிலேயே இறங்கிட்டா வேற ஆண் யாராச்சும் வந்துட்டாங்கன்னா என்ன பண்றது..
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌