42) வீட்டிற்கு போய் விவரத்தை சொன்னதும் அனைவருக்கும் மகிழ்ச்சியே..
"ஆனால் அந்த குடும்பத்தில் நடக்கிற முதல் காதல் திருமணம் இதுவே".. அவங்க இருப்பது ஒரு கிராமம்.. "ஊர் என்ன சொல்லும்?" "உறவு என்ன சொல்லும்?" என்று ஒரு பக்கம் மனதில் பயம் இருந்தாலும், "சௌமியை மிகவும் பிடித்துப் போனக் காரணத்தால் சமாளிப்போம்" என்ற தெம்பும் இருந்தது...
சிவாவும் சௌமியும் மறுநாள் கோய்ம்பத்தூர்க்கு கிளம்பி போனார்கள்.. அங்கு ஜானகிக்கு நடந்த அத்தனையும் சொல்ல அவளுக்கோ ரெம்ப சந்தோஷம்.. அங்கே தங்கியது சௌமி 3 மாதமே என்றாலும் ஜானகிக்கும் அவளுக்கும் ஒரு நெருக்கம் ஏற்பட்டிருந்தது.. அதனாலேயே அவள் ராதாவிடம் இவர்கள் போனதை பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை...
இரண்டு நாட்கள் அவர்கள் அங்கு இருந்தார்கள்..
இந்த இரண்டு நாளிலும் சிவா குடும்பம் அப்பொப்போப் போன் பண்ணி சௌமியிடம் பேசினார்கள்.. லட்சுமியும் போன் பண்ணி திட்டினாள்... ஆனால் சௌமி குடும்பத்திற்கு சிவா குடும்பத்தை சந்தித்ததுப் பற்றி எந்த விஷயமும் தெரியாது...
லட்சுமி இப்படியேத் திட்டிக்கொன்டே இருக்கவும், " நீ எப்படி நல்லா இருக்கனு பார்த்துறேன்னு லட்சுமி சொல்லவும் சௌமி மனதிற்கு வலித்தது"..
பெத்த அம்மாவே இப்டி சாபம் விட்றாங்களேன்னு..
சிவாவிடம் அதையும் சொல்லி, "இவ்ளோ பிரச்சனைக்கு நடுவுல நம்ம சேரனுமா எல்லா சாபத்தையும் வாங்கி கொண்டு??" என்றுக் கேள்வியாய் அவனைப் பார்க்க அவனுக்கு தலையில் இடி விழுந்ததுப் போல் இருந்தது..
நீங்க, " எங்க குடும்பம் ஏற்றுக்கொள்ளாமப் போயிருந்து இப்டி சொன்னா கூட பரவால்ல... ஆனா அப்போவும் நான் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்... அது வேற விஷயம்".... ஆனா இப்போ அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க" "அப்புறம் என்னங்க உங்களுக்கு பிரச்சனை?? இப்டி பேசுனா என்ன அர்த்தம்??" என்றுக் கேட்கும் போது அவன் போன் அடித்தது சிவா அண்ணன் அருண் பேசுணங்க..
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌