மதியம் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு சௌமி, ஹரி, சேகர் கிளம்பத் தயாரானார்கள் .....
அவர்கள் முன்னாடி வந்த சிவா நான் இப்போ ஊருக்குப் போகப் போறது இல்ல... மணி மட்டும் தான் போக போறான்... அவன் போய் நிலைமையை கொஞ்சம் சரி ஆக்கட்டும்... அப்புறம் நான் போறேன்னு சொன்னதும் சௌமி சரிங்க என்றாள்..
என்ன சரி... நான் அதுவரைக்கும் எங்கேத் தங்குவேன் அப்டின்னு கேக்க சௌமி இங்க தாணு சொல்ல, "இங்களாம் என்னால தாங்க முடியாது... மனுஷன் தங்குவானா இங்க" என்று சொல்ல சௌமி இவன் என்ன சொல்றான் ஒண்ணுமே புரியலயே என்று குழம்பியவளாக அவனை பார்க்க.... மற்ற மூவருக்கும் ஏதோப் புரிந்தது போல் ரகசியமாக அவர்களுக்குள்ளேயே புன்னகைக்க மணி மட்டும் சிவா காதில் மெல்லமாக, "தம்பி எதுக்கோ திட்டம் தீற்ற மாதிரி தெரியுதே😉" என்று முணுமுணுக்க... பேசாம கொஞ்ச நேரம் இரேண்டா என்று மெதுவாக சிவாவும் சொன்னான்..
அங்க என்ன ரெண்டுப் பேரு மட்டும் பேசிகிறிங்கனு சௌமிக் கேக்க, " அது ஒன்னும் இல்ல சௌமி... இப்போ இவன் போய்ட்டான்னா நான் எங்க போய் தங்குவேன் சொல்லுங்க"ன்னு பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேக்க.. " இது என்ன கேள்வி? இந்த ரூம் பிடிக்கலைனா வேற ஹோட்டல்ல தங்குங்க" என்றாள்...
"அய்யோ tubelight சௌமி என்று சிவா சொல்ல" என்னது?? என்று சௌமி முறைக்க.... அது ஒன்னுமில்ல டேய் மணி அந்த tubelighta ஆஃப் பண்ணுடா என சொல்ல இங்க tubelightae இல்லையே என்று சொல்ல மற்ற மூவரும் சத்தமாக சிரித்தே விட்டார்கள்..
ஏன் சிரிக்கிறீங்க என்று அவள் கேக்க, "அவனுங்க லூசுங்க... அவனுங்களை கண்டுக்காதிங்க"( ஒர கண்ணில் அவர்களை பார்த்து அடேய் கொஞ்ச நேரம் வாய மூடிட்டு சும்மா இருங்களேண்டா😤 அவங்களே இப்போ தான் கொஞ்சம் சிரிச்சு பேசுறாங்க அப்புறம் காண்டாகிற போறாங்க டா😪 என்றுக் கண்ணாலேயே சொன்னான்)
என்ன அங்கப் பார்வை என்று சௌமி கேக்க, " இப்போ இது ரெம்ப முக்கியாமாங்க... நம்ம விஷயத்துக்கு வாங்க" என்று சொன்னதும்... "என்ன விஷயம்???" என்று சௌமிக் கேக்க ஹரி நடுவில் புகுந்து இப்போ நீயே சொல்றியா சிவா இல்ல நான் சொல்லவா என கேட்க இல்லடா நானே சொல்றேன்னு சொன்னான்.
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌