என்னவன்19😍💕

1.9K 70 8
                                    

இதமான ஈரக்காற்றில் தன் மேனி எங்கும் நனைந்துப் பேரழகுக் கொண்ட ரோஜா மலரை போல விடிந்தது அந்தநாள் காலையும்...

காவ்யாவின் திருமண ஏற்பாடு வெகுச் சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது..
கொண்டாட்டமும் குதூகளிப்புமாகச் சென்றுக் கொண்டிருந்தது சௌமிக்கு..

திருமணத்திற்கு தேவையான உடைகள், நகைகள் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்துச் சேர்ந்தார்கள் சௌமியின் குடும்பத்தினர்..

எல்லோரும் அசதியுடன் அவரவர் அறைக்குப் படுக்க சென்றார்கள்..
சௌமியும் ரம்யாவும் அவங்க அறைக்கு தூங்கச் சென்றார்கள்..

அங்கே சிவா சரிவர சாப்பிடாமல் தூங்காமல் சிறிது நாட்கள் ரெம்ப சோகமாகக் காணப்பட  மணி மனதிலே ஒரு முடிவு எடுத்தவனாக சிவா பார்த்துக்கொண்டிருந்த போனை வாங்கி சௌமி நம்பர்க்கு அழைத்தான்...

சௌமிக்கு அவ அப்பா ரவி வேறொரு போன் வாங்கி குடுத்துவிடவே சிவா குடுத்த போனை அவள் துணிகளுக்குள் ஒழித்து வைத்திருந்தாள்...
அதை mutela சௌமி போட்டு வைத்திருந்ததால் அதில் இருந்து அதிர்வு சத்தம் மட்டும் வந்தது சௌமிக்கு மட்டும் அந்த சத்தம் சிறிதாக கேக்க அவளும் அதிர்ந்தாள்.. ph எடுத்து பார்க்க அதில் சிவா num வந்தது ..

ரம்யாவிடம்  மாடிக்கு போய்ட்டு கொஞ்சம் fresh air ல நின்னுட்டு வர்றேன் ஓருமாறி இருக்கு என சொல்லிவிட்டு அவளுக்கு தெரியாமல் மொபைலை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள்..

மறுபடியும் ph வரவே எடுத்துப் பேசினாள்.
ஹலோ என்று சொன்னதும்  மணி சிவா காதில் போனை வைத்தான்.. இவனும் ஹலோ என்று கூற நீங்க வர்றிங்களா போனே வாங்க?? என்று கேட்டதும், இல்லைங்க அது வந்து அது வந்து என்று இழுத்துக் கொண்டிருந்தான்..

அப்புறம் ஏதோ தைரியம் வந்தவனாக நான் உங்களை விரும்புறேங்க
I Love You
என்று கூற சௌமி வாயடைத்து போனாள்..
என்னங்க சொல்றிங்க என்று மறுபடியும் கேக்க, ஆமாங்க நான் உங்களை காதலிக்கிறேன் என்று இந்த தடவை தெளிவாகவும் கொஞ்சம் தைரியமாகவும் சொன்னான்..

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now