என்னவன்14😍💕

2.4K 82 2
                                    

சிவா ரூம்க்குப் போனக் கொஞ்ச நேரத்துல மணியும் அங்கு வந்தான்..

டேய் மச்சின்னு இருவரும் கட்டி அணைத்துக் கொண்டனர்...

என்னடா சொல்லாம வந்துட்டன்னு சிவா கேட்டான்...

இல்லடா உன்னை தனியா விட மனசு வரல..
அதான் நீ சென்னை கிளம்புனதும் நானும் கொஞ்ச நேரத்துலயே கிளம்பிட்டேன்னு சொன்னான்..

அப்புறம் குளிச்சுட்டு சாப்பிட்டனர்..

சௌமி பற்றி மணி கேட்டதும், அவன் முகத்துல ஒரு பொழிவு..
பஸ்ல நடந்தத எல்லாத்தையும் சொல்லிட்டான்..
கடைசில அவள ஆட்டோல்ல ஏற்றி விட்டதை சொல்லும் போது ஏதோ ஒரு தவிப்பு இருந்துச்சு சிவாக்கு அதை மணியும் கவனிச்சுட்டான்...

சரி மச்சி ph எப்படி வாங்குவன்னு கேட்டான் மணி..

அது அந்த பழைய ph தாண்டா அதை போய் எதுக்கு வாங்கிக்கிட்டுன்னு சொன்னான் சிவா...

சரிடா 2 தடவை தோள்ல சாஞ்ச ஒத்துக்குறேன் ஏதோ தூக்க கலக்கத்துல பண்ணிருப்பன்னு அதுக்கு அவ்ளோ கழுவி ஊத்துணதுக்கு அப்புறமும் எதுக்கு மறுபடியும் சாஞ்ச..

Ph வேற கொடுத்து வித்ருக்க..
ஏதோ திரும்பி சந்திக்கணும்னு வேணும்னே செஞ்ச மாறில இருக்குன்னுக் கிண்டல் பண்ணுனான் மணி..

அதுவும் இது வரைக்கும் பிரியாப் பத்தி நீ பேசவே இல்லை பாத்தியா..
சௌமி தாண்டா உனக்கு ஏத்தவ இப்போ அவ நாள தான் நீ நார்மலா இருக்க..
நேத்து இருந்த சிவாக்கு இப்போ இருக்கிற சிவாக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு மச்சி அப்டின்னு ஏதேதோ சொல்லிட்டு இருந்தான் மணி..

அதெல்லாம் இல்லடான்னு சிவா உதட்டளவுல சொன்னாலும் மறுபடியும் சௌமிய பாக்கணும்னு போல் தோன்றியது சிவாக்கு atleast குரலாவது கேக்கணும்னு இருந்தது..

சரி கால் பண்ணலாம்னு பண்ணுனான்..

அது சௌமி குடும்பம் பார்க்கு கிளம்பிட்டு இருந்த சமயம்...

சௌமி கால் எடுத்தாள்,
ஹலோ சொன்னதும் ஏதோ போனதெல்லாம் திரும்பிக் கிடைச்ச மாறி ஒரு உணர்வு சிவாக்கு..

என்னவன் 😍💕 (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang