என்னவன்40😍💕

1.9K 61 13
                                    

     
சிவா சௌமியே ரயில்வே ஸ்டேஷனில் சந்திக்க," அவர்கள் கிளம்ப கொஞ்ச நேரம் இருக்கும் போது, ராதாவுக்கு போன் பண்ணி தகவலை சொன்னான்".... நானும் சௌமிக் கூட கோய்ம்பத்தூர் போறேன்....

கொஞ்சம் அந்த வீட்டுக்காரவங்களுட முன்னாடியே சொல்லுங்களேன் அக்கா.... இல்லைனா நாங்க அங்கப் போனதும் சௌமிக் கிட்ட என்ன??? ஏதுன்னு?? விசாரிப்பங்க.... அது அவங்களுக்கு சங்கடமா இருக்கும் என்னால அதை பார்க்க முடியாது (எல்லாம் தெரியுது அப்புறம் ஏன்டா போற இந்த காதோல் வந்தாலே லூசு ஆகிருவானுங்களோ🤦) என்றதும்  "நீ ஏன் அங்க  போற சிவா??" என்றதும் இல்லைக்கா நான் கூட்டிட்டுப் போய் விட்டுட்டுப் போயிருவேன்..... அங்கலாம்  தங்க மாட்டேன்... ப்ளீஸ் ஹெல்ப் இந்த தம்பிக்காக என்று கெஞ்ச, " சரி சரி சொல்றேன்"....

ஆனா உடனே கிளம்பிரனும் என்றதும் சரிக்கா என்று போனை வைத்தான்..

அவள் உடனே அந்த வீட்டு houseowner ஜானகிக்கு போன் போட்டு தகவல் தெரிவித்து விட்டாள்..  அப்புறம் கவிதாக்கும் போன் பண்ணி விஷயத்தை சொல்லி விட்டாள் ( திஸ் ராதாக்காவ புருஞ்சுக்கவே முடியல🤔) 

உடனேக் கவிதா சௌமிக்கு போன் பண்ணதும், "  ஆமா... அவங்க என் கூடத் தான் வர்றாங்க.... என்னை அங்கே விட்டுட்டு கிளம்பிருவாங்க" என்று சொல்ல...   ஏன் உனக்கு தனியா போக தெரியாதா??.. உன்னை யாரும் கடத்திட்டு போயிருவங்களா??... இல்ல நீ தனியாவே வந்தது இல்லையா??..  இப்போ வரும் போது கூட தனியா தான வந்த....   அவனா உன்னை கூட்டிட்டு வந்தான்?? .... இதெல்லாம் சரிப் பட்டு வராது... நான் இந்த விஷயத்தை வீட்டுக்கு சொல்றேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிவிட்டாள்....

அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் போன் பண்ணி, " நீ சொன்னதெல்லாம் நான் நம்புனேன் பாரு என்னய சொல்லணும்... அம்மா சொன்னதுதான் சரிதான் போல" என்று சொன்னதும் நீங்க எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோங்கக்கா.....

இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல..... எல்லாம் என் விதிப்படியே நடக்கட்டும்..... நான் அதுப் போறப் போக்குல தான் போகப் போறேன்....

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now