என்னவன்45😍💕

1.9K 63 13
                                    

  இருளை விரட்டிக் காலைக் கதிரவன் ஒளி வீச... இனிமையான காலை தென்றல் இதமாக பரவ... குயிலின் இன்னிசை ஓசையுடன் எழுந்தாள் சௌமி..

காலை சோம்பலை முறித்துக் கொண்டு எழுந்துக் குளித்துவிட்டுக் கீழ இறங்க.. "பவித்ரா இந்தாம்மா சௌமி டீ" என குடுக்க.. அதை வாங்கிப் பருகிக்கொண்டு இருக்கும் போதே   அனைத்து சொந்தங்களும் அவளை சூழ்ந்து கிண்டலும் கேலியும் பண்ணிக் கொண்டிருந்தது..

சிவாவும் கீழ இறங்கி வர, " என்ன சிவா ஒரேத் தூக்கக் கலக்கம்  போல... வேணும்னா நீ இன்னும் கொஞ்ச நேரம் போய் தூங்கு" என்று சந்தியா கிண்டல் பண்ண," அதெல்லாம் ஒன்னு இல்லைக்கா"😁 என்று வெட்கப்பட்டுக்கொன்டே  சமாளிக்க முடியாது மறுபடியும் மேலேயே ஓடிவிட்டான்..

பின் அவர்களுக்குக்  காலைச் சாப்பாடும்  பரிமாறப்பட, " ஒரே கேலியும் கிண்டலுமாக போய் கொண்டிருந்தது"...

இரண்டு நாட்கள் போனது..

ஒரு மதிய வேளையில் கிருஷ்ணன்  சௌமியை அழைத்தார்.... அவளும் வர, "உன்கூட கொஞ்சம் பேசனும்மா" என்று சொன்னார்... அங்கே பவித்ராவும் இருக்க,"  சொல்லுங்க மாமா" என சௌமி கேட்க....

நான் சொல்றது உனக்குத் தப்பா கூடப்படலாம்... ஆனா எங்க சூழ்நிலையும் கொஞ்சம் நீ புருஞ்சுக்கணும்மா என்று சொல்ல... ஹ்ம்ம் எதுவா இருந்தாலும் சொல்லுங்க மாமா என்று சௌமி கேட்டாள்..

இங்க நிறையப் பேர் எதிர்ப்புக்கு நடுவுல தான் உங்க கல்யாணத்தை நான் முன்னெடுத்து நடத்திருக்கேன்.. நாளைக்கே இதுனால ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்தா அதை என்னால தாங்கவும்  முடியாது.... அதே நேரம்  சமாளிக்கிற அளவுக்கும் என்கிட்ட பண வசதியும் இல்ல..  உங்க அப்பா அம்மா இதுவரைக்கும் உன்னை ஏற்றுகொள்ற மாதிரி தெரியல... இனிமேல் உங்க கல்யாணம் ஆனது தெருஞ்சா என்ன பிரச்சனை பண்ணுவங்கலோ தெரியாது... ஒருவேளை அவங்க கேள்விப்பட்டு இங்க வந்து ஏதாச்சும் பண்ணுனாங்கனா என்னால அதை தாங்கிக்கவே முடியாது.. உங்களைப் பிரிக்க நினைக்குறதுக்கும் வாய்ப்பு இருக்கு..

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now