என்னவன்20😍💕

1.9K 69 8
                                    

சிவாப் பேசி முடிக்கும் வரைக் காத்திருந்து விட்டு, பின் பேச இல்ல இல்லத் திட்டத் துவங்கினாள்..

ஏங்க உங்களை நம்பி தான பழகுனேன் இப்டி பண்ணிட்டீங்களே.. இனி என் கூடப் பேசாதிங்க...
எனக்கு கால் பண்ணாதீங்க..
உங்க மேல எனக்கு கொஞ்சம் கூட லவ் வரல என்ரூ சொன்னாள் சௌமி..

ஏங்க இப்டி பேசறீங்க உங்களுக்கு என்னைக் கொஞ்சம்  கூடப் பிடிக்கலையா என்று கேட்டான் சிவா..

அதற்கு சௌமி உங்களை புடுச்சு இருந்துச்சு,
யாருன்னு தெரியாத என்னைப் பத்திரமாக் கூட்டிட்டுப் போய் சென்னைல விட்டப்போ ,
அப்புறம் பாதுகாப்புக்கு இந்த போனை வச்சுக்கோங்கன்னு தந்தப்போ, கடைசியா ஆட்டோக்கு 500 rs தந்து பெட்ரோல் ஏதாவது போட கேட்டாலும் கேப்பாங்கன்னு சொன்னப்போ பிடுச்சு இருந்துச்சு...

ஆனா இப்போ இல்ல..
எல்லாம் நீங்க எந்த நோக்கத்துல செஞ்சிங்கன்னு தெருஞ்சுபோச்சு ..

இனி எனக்கு கால் பண்ணாதீங்க.. உங்க போனே வாங்க எப்போ வர்றீங்களோ அப்போ மட்டும் கூப்பிடுங்க என்று சொன்னதும் சரிங்க ஒரு வாரத்துல வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னான் சிவா..

இல்லை எங்க அக்கா கல்யாணம் இருக்கு எங்க வீட்டுக்கு நிறைய சொந்தக்காரவங்க வருவாங்க..
அப்போ நீங்க வரவேணாம் ..
அதுக்கு அப்புறம் வாங்க அது வரைக்கும் எனக்கு கால் பண்ணாதீங்க என்று பொரிந்து தள்ளி விட்டு போனை வைத்தாள்..

இங்கு சிவா கண்ணீருடன் நின்றான்.
அதை பார்த்த மணி என்னடா ஆச்சு, ஏண்டா இப்டி நிக்கிற என்று கேட்க முழு விவரத்தையும் சொல்லி முடித்தான்..
சரிடா கவலைப்படாத எல்லாம் சரி ஆகிரும்னு ஆறுதல் சொன்னான் மணி ...

அறிமுகம் ஆனேன்
உன்னில்
தொலைந்தேப் போனேன்..

நின் பார்வையிலே
என்னைத் திருடி விட்டாய்..

பூக்கள் கூட மென்மையென்று உணர்ந்தேன்,
நின் தேகம்
தீண்டியப் பொழுதில்..

கனவிலேயேக் கவிதை எழுத தொடங்கினேன்...

உனக்காக காத்திருப்பேன்
நீ
என் காதலை உணரும் வரை
அது என் மரணம் வரை என்றாலும்..

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now