ரவி அனைத்தையும் லட்சுமியிடம் கூறவும் லட்சுமியும் கதறி அழத் தொடங்கினாள்.. "அய்யோ வயித்தெருச்சல கொட்டிக்காதடி சாபத்தை வாங்கிகாதடி"னு சொன்னனே.. கேட்டாளா?? "இப்டி அவ புள்ளையப் பாதுச்சுருச்சே" என்று அழத் தொடங்கி விட்டார்.. அழுது அழுது ஓய்ந்து அப்படியே மயங்கி விழுந்தாள்.. ரவிக்கு என்ன செய்வதென்று தெரியாது திகைத்து ஷங்கர், ரம்யா என அனைவரையும் அழைக்க... "அவர்களும் என்னப்பா??" என்றுக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய லட்சுமி மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி ஆகினர்.."அம்மாக்கு என்னாச்சுப்பா?" என்றுப் பதறிக்கொண்டு லட்சுமியிடம் வந்தனர்.. "முதல்ல போய் தண்ணி எடுத்துட்டு வாங்க!" என்று ரவிக் கத்த.. ஷங்கர் ஓடிப் போய் தண்ணி எடுத்துட்டு வந்து முகத்தில் தெளிக்க லேசாக கண் விழித்தாள் லட்சுமி..
"கொஞ்சம் தண்ணிக் குடிங்கம்மா" என்று ரம்யாக் கொடுக்கவும்.. கொஞ்சமாகக் குடித்து விட்டு மீண்டும் அழத் தொடங்கினாள்.. "நான் இப்போவே என் பொண்ண பார்க்கணும்" என்றதும் அனைவருக்கும் அதிர்ச்சி..
"எந்த பொண்ணுமா?" என்று ரம்யாக் கேக்க ரவி அனைத்தையும் சொல்லவும் அவர்களும் சேர்ந்து அழுதனர்.. காரை எடுத்துக்கொண்டு சௌமியைப் பார்க்க விரைந்தனர்..
இங்கு சௌமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. .. சிவா வீட்டில் எல்லா சடங்கும் நடந்து முடிந்திருந்தது.. அனைவரும் கவலையாக இருந்தனர்.. சௌமியப் பார்க்க சில பேர் செல்ல," அவள் மயக்கத்தில் இருந்தவுடன் சிவா அனைவரையும் வீட்டிற்கு போக சொல்லிவிட்டான்".. மணியும் கலையும் சிவாவுடனே இருந்துவிட்டனர்..
மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தவள்.. சிவாவை அருகில் கூப்பிட ..அவள் பக்கத்தில் போய் அவள் கையை பிடித்து கொண்டவாறு அப்படியே அமர்ந்தான்..
"ஒன்னும் இல்லடா.. கவலை படாதடா" என்று அவள் விழியில் ஓரத்தில் வடிந்த நீரைத் துடைத்துக் கொண்டேத் தலையையும் கோதி விட்டு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்..
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌