சௌமிக்கு நம்ம நாலத் திட்டு வாங்குராங்கன்னுச் சொல்லிட்டுக் கொஞ்சம் அனுதாபம் வந்தது..
ஆனா அதை எதையும் வெளியைக் காட்டிக்காம,
சிவா கிட்ட நீங்க ஏங்க அவசரமா வாங்கி அந்தப் பக்கம் போட்டிங்க நானே ஜன்னல் திறந்துப் போற்றுப்பேன்லன்னு சொன்னாள்..சரி விடுங்க அவர் கிட்ட நான் மன்னிப்புக் கேட்டுட்டேன்னு சொல்லிட்டு இருக்கும் போதே எல்லோரும் பஸ்சுக்குள்ள ஏறுனாங்க..
அவரும் வந்ததும் மறுபடியும் சிவா மன்னிப்பு கேட்டான் அவர் கிட்ட சௌமியும் மன்னிப்பு கேட்டாள்..
அப்புறம் பஸ் கிளம்பியது...
சிவாக்கு ph call வந்துச்சு மணி கிட்ட இருந்து..அவன் ஏற்கனவே சென்னைக் கிளம்புறதுக்கு முன்னாடி மணிக் கிட்ட சௌமியப் பற்றிச் சொல்லிருந்தான்...
சென்னைக்கு கூட்டிட்டு போறதப் பற்றியும் சொல்லிருந்தான்..
சிவா அம்மா பவித்ரா கிளம்பி வர சொன்னதுக்கு ரத்தம் கொடுத்த நண்பன் இன்னும் கண் விழிக்கல எழுந்ததும் வர்றேன்னு சொல்லி சமாளிச்சு வச்சுருந்தான் சிவா...
சிவா ph எடுத்து என்னடான்னு கேட்டான் சாப்டியாடா என்ன பண்றன்னு மணி விசாரிச்சுட்டு இருந்தான்..
சாப்பிட்டேன்டான்னு சிவா சொன்னான்..
அந்த பொண்ணுன்னு கேட்டதும் இல்லடா அவங்க சாப்பிடல டீ மட்டும் தான் குடுச்சாங்கன்னு சொன்னான்..
சரி அந்த பொண்ணு அந்த பொண்ணுன்னு மட்டுமே சொல்றியே அந்த பொண்ணுப் பெயர் என்னடான்னு மணி கேட்டதும் தான் சிவாக்கு இன்னும் பெயர் கேக்கலைங்கிரதே நியாபகம் வருது🤦
கேக்குறேண்டானு சொல்லிட்டு ph cut பண்ணிட்டான்..ஆனா எப்படி கேக்கன்னு தெரியல
அப்புறம் கேட்டுப்போம் னு சொல்லிட்டு அவன் ph எடுத்து காமெடி வீடியோஸ் பாத்துட்டு இருந்தான்..சௌமி ஜன்னல் பக்கம் தான் அப்போவும் பார்த்துட்டு வந்தாள்..
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌