என்னவன்29😍💕

1.7K 68 12
                                    

சௌமி சிவாவை ஆட்டோவின் கண்ணாடி வழியேப் பார்த்தபடியேப் போக சிவாவும் அங்கிருந்துக் கிளம்பினான்.

சௌமி ஆட்டோவை விட்டு இறங்கும் சமயம் அவள் ph அடித்தது.. அதில் கவிதா , "வந்துட்டியா ??எங்க இருக்க இப்போ ??" என்றுக் கேட்க வந்துட்டேன்... உனக்கு யார் சொன்னா நான் வர்றத.. வீட்ல இருந்து விஷயத்தை சொன்னங்களா என்று கேட்டாள் சௌமி ..

ஆமா பாட்டி சொன்னாங்க நடந்ததை எல்லாம் என்று கவிதா கூற, சரி நான் மாடிக்கு தான் வந்துட்டு இருக்கேன் போனே வை என்று சௌமி சொல்லிட்டு மேலே ஏறிச் சென்றுப் பெல்லை அழுத்தக் கவிதா வந்துத் திறந்ததும் கவிதா ஏதோ சொல்லப் போக.. அக்கா இப்போ என்கிட்ட எதையும் கேக்காத  நான் fresh ஆகிட்டு வந்துக்குறேன் என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று பாத்ரூமிற்குள் நுழைந்தாள்..

கொஞ்ச நேரத்தில் சௌமி குளித்து விட்டு வெளிய வர அவள் வருவதற்காகவே காத்திருந்தது போல் அவள் வந்ததும் கவிதா தன் கேள்விகளை கேட்க தொடங்கினாள்..

இப்போவச்சும் சொல்லுடி என்ன ஆச்சு?? அந்த பையன் எப்படி அங்க வந்தான்?? என்று கேட்க அதான் பாட்டி எல்லாத்தையும் சொல்லிருக்குமே என்று சொல்ல.. ஆமா சொன்னாங்க..

நான் உன்கிட்ட இங்க இருந்து போகும் போதே என்ன சொன்னேன், "எதையும் மறைக்காத உண்மைய சொல்லு அப்போ தான் எந்த பிரச்னையும் வராதுன்னு சொன்னேனா இல்லையா".. அப்புறம் எதுக்கு அம்மாக் கிட்ட அந்த ph அவன் தந்ததுன்னு சொல்லாம மாமா குடுத்தாங்கன்னுச் சொல்லிருக்க...

நீ சொன்ன இந்த பொய் நாள எவ்ளோ பிரச்சினை வந்துச்சுன்னு தெரியுமா😏..
அது மாமா தான் அந்த மாறி மெசேஜ் அனுப்பிருக்கங்கன்னு சொல்லி அம்மா என்கிட்ட சண்டை பிடிக்குது நான் பதிலுக்கு பேச எங்களுக்குள்ள பெரிய வாக்குவாதமே நடந்துருச்சு நீ மட்டும் உண்மை சொல்லிருந்தா இதெல்லாம் வந்துருக்குமா என்று வருத்தத்துடன் கேட்டாள் கவிதா..

நீங்க எல்லாம் உங்க பிரச்சினைப் பத்தி மட்டும் தான் யோசிக்கிறீங்க... என் இடத்துல இருந்து யாரும் பார்க்க மாற்றிங்க..
எனக்கு அப்போ இருந்தச் சூழ்நிலை அப்டி... அம்மா என்ன பார்த்து முறைச்சுட்டு இருந்தாங்க..
நான் போனதுல இருந்து அடிக்க வேற செஞ்சாங்க..

என்னவன் 😍💕 (Completed)Where stories live. Discover now