"என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்...
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்...
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்...
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்...என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்...
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்...காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா...!
உயிர் வாழ்வதா, இல்லை போவதா...!
அமுதென்பதா... விஷமென்பதா...
உன்னை அமுத விஷமென்பதா...!!!என் காதலே என் காதலே
என்னை என்ன…"ஹெட்போனில் SPB பாடலைக் கேட்டுக் கொண்டே வந்தவள் பிரேக் போட மறந்தாள்.
டமால்ல்ல்.....
"ஹேய் பக்கி... கண்ணுத் தெரியலையா... ரோடு பார்த்து போகமாட்ட...",
ஒருவன்."சாரி அண்ணா... அவளுக்குக் கண்ணுத் தெரியாது", நிலா.
"என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது...", கோவமாக அவன்.
"லூசு மாதிரி....", நிலா.
"என்ன சொன்ன....?", ருத்திர மூர்த்தியானான்.
"லூசு மாதிரி... இவள் உங்க பைக் இடிச்சிட்டதால பாருங்க உங்களுக்குக் கண் தெரியாம போச்சு... ஐயோ பாவம்", பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் நிலா.
"என்ன சொல்ற... எனக்கு கண் தெரியலையா...", அவன்.
"ஆமா அண்ணா... அப்புறம் எங்கிட்ட கேட்கிறீங்க உங்கள பார்த்தா எப்பிடி இருக்குனு... அதான் சொன்ன...", நிலா.
"என்ன நக்கலா... சரி பேச்ச மாத்தாத... என் பைக் டேமேஜ் அகிருக்கு... கண் தெரியாம பைக் டிரைவ் பன்றீங்க இதை நான் நம்பனும்.. அப்படியே வா போலீஸ் ஸ்டேஷன்க்கு...",அவன்.
"சார். உண்மையாகவே எனக்குக் கண் தெரியாது சார். அவள் தான் எனக்கு தைரியம் வரனும் சொல்லி பைக் டிரைவ் பண்ண சொன்னா. நீ வாடி. பைக் டிரைவ் பண்ணு. சாரி சார். இனி இந்த மாதிரி நடக்காது...", ஹம்சவாகினி.
YOU ARE READING
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
Romanceகாதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?