நேசம் 18

325 24 10
                                    

சிம்போசியம் பற்றியத் தகவல்( தோழியின் சந்தேகம் காரணமாக இந்தப் பதிவு)... பொறியியல் கல்லூரியில் சிம்போசியம் வருடம் ஒரு முறை நடப்பது.. தனது கல்லூரியில் அவர்களின் டிபார்ட்மென்ட் சார்ந்து போட்டிகள் நடத்துவர்.(சில விளையாட்டுப் போட்டியும் உண்டு ஓய்வு நேரத்தில்)... அதனை அந்தக் கல்லூரி மாணவர்கள் மற்ற கல்லூரிகளுக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு வரவேற்பு தந்து நல்ல படியாக நடத்தி முடித்து அந்த டிபார்ட்மென்டீன் முதல் பதவி வகிப்பவர் மூலம் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றுவர்.

ஹம்சி மற்றும் நிலாவிற்கு கல்லூரி இரண்டாம் வருடம் கடைசியில்... இரண்டு நாளில் சிம்போ...

கவின் மற்றும் ராம் இருவருக்கும் நான்காம் வருடம் கடைசி...

மதிய வேளை...

"என்னப்பா... எல்லாரும் சைலென்ட் ஆ இருக்கிங்க.. ", நிலா.

"சைலென்ட் இல்ல... நாளைக்கு அடுத்த நாள் சிம்போ... அதுக்கு டெக்கரேசன் டீம்ல நான் இருக்க. எப்படியும் நைட் ஆகிடும்.. அதான் என்ன பண்ணனு யோசிக்குறேன்..", ஹம்சி.

"நாங்க இருக்கோம் ஹம்சி. லேட் ஆச்சுனா.. நாங்க உன்னை வீட்டுல விடுறோம்... என்னடா கவின்", ராம்.

"வேண்டாம்னு அவங்க கிட்ட சொல்லலியா.. ",கவின்.

"என்கிட்ட கேக்கவே இல்லை. நான் நல்லா வரையுறேன்னு கண்டிப்பா நீ இருக்கணும் சொல்லிட்டாங்க... ரங்கோலி போடனும் ஆ...", ஹம்சி.

"சரி.. நாங்க ட்ராப் பன்றோம். நீ ப்ரீயா இரு", கவின்.

"ம்ம்ம்..", ஹம்சி.

"எனக்கும் அடுத்த வாரம் வரும் ஹம்சி. பட் என்ன யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க..", நிலா.

"நீ க்ளாஸ்ல இருந்தா தான உன்னை பத்தி தெரியும். மேடம் புல்டைம் அந்த மரத்தடிக் கிட்ட தான் இருக்கிங்க...", கவின்.

"ப்ரோ... நீங்க என்னைப் பாத்துடீங்களா", நிலா.

"நீ அங்க தனியா உட்கார்ந்து இருக்குறது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. நான் அந்த இடத்துக்கு மொபைல் சிக்னல் இல்லைனு வந்தப்ப பாத்தேன்", கவின்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ