அதிகாலை அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க.. யாரும் எதுவும் பேசவில்லை. வசு கவினின் மேல் கோபத்தில் இருந்தார். இங்கு சம்மதம் என்று கூறிவிட்டு இப்படி அவர்கள் முன்னிலையில் மறுப்புத் தெரிவித்து அவர்களினை கவலைக்கு உள்ளாக்கிவிட்டானே என்று... கவினும் மதியும் சாப்பிட அமர சந்திரன் எழுந்து கொள்ளத் தொடங்க
"அப்பா எல்லாருகிட்டயும் நான் பேசனும்... கொஞ்சம் நேரம் இருங்க", கவின்.
சந்திரன் அமரவும்...
"நீங்க என் மேல் கோபமா இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது... நான் பண்ணது தப்பு தான்... இப்போ சொல்றேன்.. என் மனைவியா வரனும்னா அது ஹம்சி மட்டும் தான்... நீங்க நிச்சயம் பண்ண வேண்டியதுலாம் தேவையில்லை. நேரடியா எனக்கும் மதிக்கும் கல்யாணம் வைங்க.. நான் நேர்ல போய் என் அத்தை மாமகிட்ட பேசிட்டு கலயண நாள் குறிக்க சொல்லிட்டு வறேன்... இப்போ எனக்கு வேலை இருக்கு.. நான் வறேன்..பை", என்று கூறிய கவின் நொடியும் தாமதிக்காமல் அவனது பைக்கில் ஏறி ஹம்சி வீட்டிற்குப் பறந்தான்..
வசு ஆன்ந்த அதிர்ச்சியில் இருக்க.. குடும்பம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். வேணி வேகமாக கடவுளின் முன் சென்றவர் தீபம் ஏற்றி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். வேணிக்கு கவினின் போக்கில் மாற்றம் தெரிந்து தான் இருந்தது.. எதோ பரிகொடுத்தது போன்று இருந்த அவன் முகத்தினைக் காண சகிக்காமல் இருந்தார். எப்படியோ திருமணத்திற்கு சம்மதித்துவிட்டான் என்று நினைத்தவர் நிம்மதியாய் இருக்க... அவன் மறுப்புத் தெரிவித்த நொடி சந்திரனிடம் புலம்பி இருந்தார்.
இதில் மேலும் முக்கியமான விவரம்... வசுவின் திட்டம் தான் உதய் மற்றும் கவின் இருவருக்கும் ஹம்சி மற்றும் ஹம்சவர்த்தினி இருவரையும் பெண் முடிப்பது...
ஹம்சி மற்றும் நிலா கல்லூரி செல்லும் சமயம்...அவர் என்றும் கோவிலுக்கு வரும் பொழுது தான் ஹம்சியினைச் சந்தித்தார். அப்பொழுது அவருக்கு ஹம்சி நிலா இருவரினையும் மிகவும் பிடித்துவிட... தியாவின் அன்னை மூலம் அவர்கள் விவரம் அறிந்தவர்... தியாவின் அன்னை ஹம்சியின் குடும சொந்தம். உதய்க்கு ஹம்சியின் அக்கா மற்றும் கவினுக்கு ஹம்சி எனவும் நிலாவினை மதிக்கு முடிப்போம் என்று இருக்க.. தேவன் கேட்டுக் கொள்ள மதிக்கு நிஷாவினை முடிவு செய்துவிட்டார். அதன் பின் கவின் திருமணம் பற்றி இப்போழுது பேசதீர்கள் மதியுடன் தான் என்று கூறிவிட உதய்க்கு மட்டும் பேசி ஹம்சி வீட்டிலும் சம்மதம் சொல்லிவிட... உதயும் ஹம்சவர்த்தினியும் நட்பில் தொடங்கி காதலில் முடிக்க... ஹம்சவர்த்தினியின் மூலம் ஹம்சி கவினின் ஆபிஸில் வேலை செய்வதனை உறுதி செய்து கொள்ள... உத்யும் முதல் நால் அவளை பார்த்து வாகினி என்று கூற அவளுக்கு அடையாலம் தெரியவில்லை. சரி அவளுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று உதயும் ஹம்சியிடம் சொல்லவில்ல நான் உன் அக்காவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று.. அவன் ஹம்சியிடம் பேசுவதனை எல்லாம் கவின் தவறாக எடுத்துக் கொள்ளக் காரணம் ஹம்சி உதயுடன் திருமண காரணமாக பேசுகிறாள் என்று தான்.
YOU ARE READING
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
Romanceகாதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?