நேசம் 28

355 20 3
                                    


ஹம்சி அறையில் நிலா மற்றும் ஹம்ச வர்த்தினி மூவர் மட்டுமே இருந்தனர். ஹம்சி அழுத முகமாகவே இருக்க.. நிலாவிற்கு அவளிடம் என்னவெனக் கேட்க தயக்கம் இருக்க... ஹம்சவர்த்தினிக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அதனால் அவளும் எதுவும் கூறாமல் கவலை படியவே நின்று இருந்தாள். ஹம்சியின் தாயும் தமிழ் செல்வனிடம் புலம்பிக் கொண்டு இருந்தார்.

ஹம்சிக்கு நிஷாவின் அலைபேசியில் கேட்ட வார்த்தைகளே காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது...

கவினுக்கு காபி கொடுத்துவிட்டு உள்ளே சென்ற நொடி நிலாவும் ரக்ஷியும் தான் கவின் பற்றிய உண்மைகளைக் கூற அதில் ஹம்சி மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள். ஆனால்....

நிஷா ஹம்சியின் அறைக்கு வந்தவள்.. ஹம்சியிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூற நிலாவும் ரக்ஷியும் வெளியில் வந்து நிற்க...

"ஹம்சி உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்கனும். உங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்ல முடியுமா... ", நிஷா.

ஹம்சி அதிர்ந்து போனாள்.. இதுவே அவளுக்கு கவின் பற்றி தெரியாமல் இருந்தால் முழுசம்மதம் தெரிவித்து இருப்பாள். ஆனால் இப்பொழுது அப்படி அல்லவே...

அவளின் அதிர்ந்த முகம் பார்த்தவள்...

"என் ப்ரண்டு கவின் அத்தான சின்ன வயசில் இருந்து காதலிக்குறா.... அவளுக்கு அத்தான்னா உயிர். அத்தான் அதுக்கு மறுப்பு சொல்லிட்டா என்ன செய்யான்னு சொல்லவே இல்லை. அவள் இனி சொலிடுவேன்.. இந்த நிச்சயம் அதுக்குள் நடந்துட்டா அவளுக்கு இறந்து போறத தவிர வேற வலி இல்லைன்னு புலம்புறா... நீங்க வேண்டாம் சொல்லிட்டா.. அத்தான் கிட்ட நான் எப்படியாவது சம்மதம் வாங்கிடுவேன்", நிஷா.

"ஆனால் அவர் அந்த பொண்ண விரும்பனும்ல", ஹம்சி முகத்தில் வலியினை மறைத்து சாதரணமாக கேட்க

"அத்தானுக்கு அந்தப் பொண்ண ரொம்ப பிடிக்கும் அவள் லவ் பன்றான்னு சொன்னா போதும் அத்தான் ஒத்துக்குவார். நீங்க மட்டும் இந்த நிச்சயத்தினை நிறுத்திடுங்க... அடுத்து நான் பார்த்துக்குறேன்", நிஷா.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Donde viven las historias. Descúbrelo ahora