நேசம் 16

331 24 16
                                    

உதய் நிகிலுக்கு கால் செய்து சக்சஸ் எனக் கூறினான். நிகில் ஹோம் குழந்தைகளுடன் வெளியில் வெடி வைத்துக் கொண்டு இருந்தான். நிகில் உதயின் நண்பன்.

வீட்டின் வெளியில் பயங்கரமான வெடிச்சத்தம் கேட்க என்னவென்று அனைவரும் அதிர்ந்து வெளியில் வந்தனர். வெடி வெடித்ததில் ஒரே புகையும் தூசியும் இருக்க கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை.

"என்ன ஆச்சு" என்று பின் இருந்து மதி கேட்க

அனைவரும் சிரிக்கத் தொடங்க.. என்ன ஆச்சு இவங்களுக்கு என்று இவன் குழம்பினான்.

கடைசியில் வந்த கவின் "இங்கே என்ன பன்றீங்க எல்லாரும்... என்ன சத்தம்", என

மதி உட்பட அனைவரும் அவன் புறம் திரும்பியவர்கள் மேலும் நகைக்க.. மதி தன்னைக் கட்டுப்படுத்த முடியாது... வயிற்றைப் பிடித்து சிரிக்க ஆரம்பித்தான்.

இவங்களுக்கு என்ன ஆச்சு... பின்னாடி ஒரே புகையா வேற இருக்கு... யாராவது நைட்ரஸ் ஆக்சைடு போட்டு விட்டாங்களா.. அதான் இதுங்க இப்படி சிரிக்குதுங்க... இவன் என்ன இப்படி இருக்கான்.

"டேய் என்ன டா.. பேன்சி காம்பெடிசன்ல சேர்ந்து இருக்கியா.. இப்படி இருக்க..", கவின் மதியிடம் கேட்க..

"நீயும் அப்படிதான் டா இருக்க என் தவப் புதல்வனே..", சிரித்துக் கொண்டே வேணி கூற

கவினும் மதியும் தங்களைப் பார்த்துக் கொண்டனர்.

தனது முதுகில் இருந்து இரண்டு தேவதை இறக்கை வீற்று இருக்க... முகத்தில் வெண்மை நிறம் பூசப்பட்டு மூக்கின் நுனியில் சிவப்பு நிறத்தில் வண்ணம் பூசப் பட்டு தேவதையா இல்லை கோமாலியா என்று எண்ணும் வண்ணம் நின்று இருந்தனர்.

"என்ன இது யாரு வேலை", வசு

"உதய் தான்மா.. அவன் தான் இங்கே இல்லை. உதய்ய்ய்ய்...", சந்திரன்.

கவினும் மதியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு இணைந்து வீட்டின் உள்ளே நுழைய...

கதவினைத் திறந்ததும் மலர்கள் அவர்களினை அலங்கரிக்க.. டப் டப் என சத்தம். பலூன் சிலது வெடிக்கும் சத்தம்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin