நேசம் 27

312 23 4
                                    


நிலா ஹம்சி கவின் ராம் மற்றும் ரக்ஷி என அனைவரும் ஹோட்டலில் சந்தித்து நேரம் கழித்தனர். கவின் தவறியும் ஹம்சியினை விழிகளில் காணக் கூட இல்லை. ஹம்சி அவனிடம் காதலைக் கூற ஆவலுடன் அமர்ந்து இருக்க... நிலா ராம் ரக்ஷி மூவரும் அவர்களுக்குத் தேவையான சுவீட்டினை வாங்க முன்னே செல்ல...

"காதல் பற்றி என்ன நினைக்கிறீங்க கவின்..", ஹம்சி.

"அதெல்லாம் உனக்கு எதுக்கு... கதலிக்குறவங்களுக்கு தான் அதை பற்றிய பதில் தெரியனும்", கவின்.

"அப்போ.. நீங்க காதலிக்குறீங்களா... ", ஆமான்னு சொல்லுடா என ஹம்சி நினைத்துக் கொண்டு இருக்க..

கவினின் ஆழ்மனம் சொல்லச் சொல்லிக் கூற.. ஆம் என்று அவனை அறியாமல் கூறிவிட..

"உண்மையாகவா... யாரு அவங்க.. நீங்க யாரை லவ் பன்றீங்க.. சொல்லுங்க", ஹம்சி.

அப்பொழுதுதான் அவனுக்குத் தான் கூறியது உணர... ஒரு நொடி விழித்தவன் அதன் பின் சாதரணமாக...

"வேறு யாரு... நம்ம ரக்ஷி தான்... அவளும் ஓகே சொல்லிட்டா... இனி வீட்டில் சம்மதம் சொல்லிட்டா கல்யாணம் தான்... எல்லாரும் காதல் இருக்குற மாதிரி நடிப்பாங்க.. ஆனால் ரக்ஷி அப்படி இல்லை... எனக்கு என்ன வேணும்னாலும் செய்வா", எனக் கூறிய கவின் எழுந்து சென்றுவிட... ஹம்சிக்கு அவன் கூறிய வார்த்தைகள் சில நொடி பின்னரே செவியினை அடைந்தது... அப்படியானால்... அவனுக்கு தன் மேல் காதல் இல்லையா...அவன் நினைத்த அதே நினைவுகள் கேள்விகள் எல்லாம் இவள் கண் முன் வந்து போக... அவளுக்கு அந்த இடத்தில் உட்கார்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டு இருப்பது புரிய... அதன் பின்னரே ரெஸ்ட் ரூம் சென்றவள் அங்கு கதறி அழுது விட.. யாரோ வரும் சப்தம் கேட்க.. அதன் பின் தன்னை நிலைப் படுத்தியவள் நார்மல் ஆகி வெளியில் வந்து கவினின் முகம் காணாமல் நிலாவிடம் பொய்யாக புன்னகை புரிந்து அந்த நாளினைக் கடத்தினாள். அதன் பின் வீட்டினை அடைந்தவள் பலவாறு யோசித்து வீட்டில் கோவையிலேயே பணிபுரிய சம்மதம் பெற்று நிலாவுடன் நேர்காணல் சென்று தேர்வாகி கவினிடம் இருந்து தப்பிக்க வேலையில் கவனம் செலுத்த வேணுடும் என்று சேர்ந்தால். அந்தோ பரிதாபம் கவினே அங்கு மேனேஜர் ஆகிப் போக... அவள் எதிலிருந்து மீள வேண்டும் என எண்ணி இருந்தாளோ அதன் கையில் வசமாகச் சிக்கிக் கொண்டாள்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Wo Geschichten leben. Entdecke jetzt