தன் கண் முன் நடப்பவை கனவா... நினைவா என யோசித்துக் கொண்டு இருந்தாள் ஹம்சி. ஆம். அவள் இரவில் நினைத்தது ஒன்று... நடப்பது ஒன்று... இங்கு வந்தாலும் கவின் முகத்தினைக் கூடப் பார்க்க கூடாது என்று தான் சபதம் ஏற்றாள். ஆனால் அதற்கு மாற்றாய் அவனுடன் இப்படி இணைந்து ஆடிக் கொண்டிருப்போம் என்று நினைக்கவில்லை. அதன் அதிர்ச்சியில் அவள் இருக்க... அவள் இதழ் சேரும் நிலையில் கவின் இதழ் அருகில் இருக்க... சேரும் நொடியில் கவின் போனில் அழைப்பு வர... பவர் கட் ஆனது😉
போனை அடன்ட் செய்தவன் உடனே அங்கிருந்து விரைந்தான்.
ஆடிக் கொண்டிருந்த அனைவரும் பவர் கட் ஆனதும் சலசலத்தனர்.
நிலாவின் அருகில் இருந்த அந்த நபர் நிலாவின் இடையினை இன்னும் அழுத்தி அவள் காதருகில் குனிந்து "ஐ லவ் யூ ஸ்பார்க். ஜஸ்ட் நொவ் ஐ ஆம் பால் இன் லவ் வித் யூ!", கூற
நிலா அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நேரம் அவன் இப்படிக் கூற அவனை அறையும் நோக்கில் அவளது வலது கையினை மேலேத் தூக்க... அவன் நொடியில் அறிந்து கொண்டான். இடக்கையில் அவள் கையினைப் பற்றி இடையில் இருந்த வலது கையினால் அவளின் கன்னத்தினைப் பற்றி அவனின் இதழைப் பதித்தவன் இமைக்கும் நேரத்திற்குள் மறைந்தான்.
நிலா பொறுமையின் எல்லையைக் கடந்தவள் யூ...ஆஆஆ... எனக் கத்தினாள்.
ஹம்சி நிலாவின் அலறலில் நினைவினை அடைந்தாள். சுற்றுப்புறம் உரைக்க... நிலாவினை தேடினாள். ஒளி இல்லாத நிலையில் சிலர் போனில் வெளிச்சம் காட்ட.. அவள் அருகில் ஓடினாள். எல்லாரும் அவர்களைச் சூழ்ந்து கொள்ள... நிலா நிதானம் அடைந்து இருட்டில் பயந்துவிட்டதாகக் கூறவும் அனைவரும் அவளை ராமிடம் பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவர்கள் இடத்திற்கு செல்லத் தொடங்கினர்.
ராம் மூவரையும் அழைத்துக் கொண்டு அவன் ரூமிற்குச் சென்றான்.. கவின் பற்றி ரக்ஷி கேட்க... கவின் அப்பொழுது தான் முக்கியமான விஷயம் என்று காரில் செல்லச் செல்ல போனில் அழைத்து விவரம் கூறினான். அவனும் இவர்களிடம் அப்படியே சொல்ல... அனைவரும் நிலாவிடம் என்ன எனக் கேட்க.. அவள் எதுவும் கூறவில்லை. பயம் என்று கூற..
أنت تقرأ
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
عاطفيةகாதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?