கல்லூரி காலம் கவினுக்கும் ராமுக்கும் முடிந்தது... கவின் ரக்ஷி, ராம், நிலா, ஹம்சி அனைவரும் தனியாக கோவிலுக்குச் சென்று இருந்தனர்.
கோவிலில் சாமி தரிசனம் முடித்தவர்கள் ஹோட்டல் சென்று உரையாடிக் கொண்டு இருந்தனர்.
"ப்ரோ.. எனக்கு சாக்கி வாங்கித் தர இனி ஆளில்லையே... நோ ப்ரோ", நிலா.
"ஏன்மா உனக்கு சாக்கி தான் கவலையா.. பிரியுரோம்னு கவலை இல்லை.. அப்படித்தான...", ராம்.
"என்ன கவலை. எப்பிடியும் இங்க இந்தச் சென்னையில தான இருப்பீங்க.... அதுக்கு எதுக்கு கவலை. நீங்க நான் கூப்பிட்ட அடுத்த செக்கண்டு வந்துடுவீங்க.. என்ன எனக்கு சாக்கி தான் வாங்கி தர முடியாது... அதுக்காக உங்களை கூப்பிட முடியாதில்லை...", நிலா.
"என்ன எண்ணம்... நல்லா வருவ", ராம்.
"கொஞ்சம் சும்மா இருங்க... கவின் அப்புறம் என்ன பண்ண போறீங்க... வேலை.. திருமணம்", ரக்ஷி.
"அப்பா ஆபிஸ்ல தான் வேலை பார்க்கணும் ரக்ஷி. நானும் மதியும் இந்தப் பிரிவு எடுக்கக் காரணமே அதுதான். மதியும் இனி இங்கே வந்திடுவான். கம்பெனி இனி நாங்கள் பார்த்துப்பொம்", என்றான்.
" திருமணத்துக்கு இன்னும் இரண்டு வருடம் நேரம் இருக்கு ரக்ஷி", என்று ஹம்சியைப் பார்த்துக் கொண்டே கவின் கூற...
ஹம்சிக்கு உள்ளுக்குள் எதோ செய்தது. இருந்தும் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
"நீங்க ராம்", ரக்ஷி கேட்க
"நீங்கள் அன்னைக்கு வந்த பார்ட்டில ஒரு ஆன்டி இருந்தாங்களா.. அவங்க கணவர் கம்பெனில தான் ஜாய்ன் பன்னனும் சொல்லி ஸ்ட்ரிக்ட் ஆர்டர். ஸோ ஜாப்க்கு எந்த விதப் பிரச்சினையும் இல்லை. திருமணம் பற்றிலாம் நான் யோசிக்க எனக்குத் தகுதி இல்லை. நான் யாரும் இல்லாம இருக்கேன். என்னை நம்பி ஒரு பொண்ணு வந்து அவள் வாழ்க்கை தனிமையில் தான் கழியும்... ", ராம் கூற...
"சரி ஒரு நிமிடம் நான் ரெஸ்ட் ரூம் போய்டு வரென்", ரக்ஷி எழுந்து சென்று விட...
YOU ARE READING
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
Romanceகாதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?