நேசம் 17

324 20 10
                                    

மதி வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு வசு கவினுடன் காரில் ஏறினான்.

மூவரும் ஏர்போர்ட் வந்தடைந்தனர்.

"பியூட்டி இப்படி முகத்தை வச்சிருந்தா நான் எப்படி சந்தோசமா போவேன்...", என்று வசுவின் கையினைப் பற்றிக் கொண்டு மதி கூற...

"டேய் மதி நீ லாஸ்ட் வீக் சண்டே ஈவ்னிங் வந்துட்ட போல... அதுவரைக்கும் என்னடா பண்ண...", கவின் கேட்க...

"என்ன மதியமே வந்துட்டியா... நைட் தான நீ என்னைப் பார்க்க வந்த ...", எனக் கோவமாக மதியிடம் வசு கேட்க...

"இப்படி மாட்டி விட்டுடியே டா... கவினு.... உன்னைலாம்", என்று மனதில் நொந்தவாறு

"பியூட்டி அவன் சொல்றத நம்புறியே... நான் உன்னைப் பார்க்க வேண்டும்னு எவ்வளவு நேரம் காத்திருந்து அவசர அவசரமா வந்தேன்... என்னை போய்...", என்று வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

"டேய் படவா.. உன்னை", என தோளில் இரண்டு அடி வைத்தவர் அவனை இருக அணைத்துக் கொண்டார்.

சூழ்நிலையினை மாற்றிய கவினைக் கனிவுடன் கண்ட மதி அவனிடம் ஹைபை செய்து கொண்டு இருவருக்கும் விடையளித்துச் சென்றான்.

கல்லூரி வந்தடைந்த ஹம்சி படபடப்புடன் தான் இருந்தாள். மதியம் அவனை எப்படி சந்திக்கப் போகிறோம்... தனக்கு எந்தவித உணர்வும் இல்லை என்றால் சாதரணமாக இருக்கலாம். ஆனால் தான் அப்படி இல்லையே... முருகா... என்னை இப்படி சோதிக்குறியே... உனக்கு கருணை இல்லயா... என புலம்பிக் கொண்டே நேரம் கடத்தினாள்.

காலை இடைவேளை...

நிலா அவள் வகுப்புத் தோழியுடன் நடந்து வரக் கண்ட விஜய் அவள் அருகில் செல்வது போன்று செல்ல...

அவள் தைரியம் கண்டு ஒரு நொடி வியந்தான் விஜய். இவளுக்கு என்ன தைரியம்... அவள் பக்கத்துல போனால்..

அவன் அவளை நெருங்க சிறிது நேரம் முன் ஒருவன் அவனைத் தள்ளி முன் செல்ல... நிலாவினை நெருங்கியவன் அலறினான்...

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Where stories live. Discover now