நேசம் 12

391 24 15
                                    

ராம் சென்றதும் ஹம்சி நிலாவிடம் என்ன என்று கேட்க... அவள் ஹம்சியை அணைத்துக் கொள்ள.. ஹம்சியின் முதுகில் ஈரம் உணர்ந்தவள் அவளைத் தேற்றினாள்.

என்ன எனக் கேட்க.. நிலா நடந்த அனைத்தையும் கூறினாள். அவள் கூறக் கேட்ட ஹம்சி அவனைக் கண்டறிந்து ஒரு வழி செய்ய வேண்டும் எனக் கூற...

நிலா ஹம்சியினைத் தடுத்துவிட்டாள். அவனை இனிப் பார்த்தால் எதுவும் முடிவு செய்வோம் எனக் கூறிட ஹம்சியும் சரி எனக் கூறிவிட்டாள்.(யாருனு இப்போவே பார்த்திருக்கலாம். விதி யாரை விட்டது???😉😉😉)

கல்லூரியில் சந்தித்த மூவரும் கவின் பற்றி ராமிடம் கேட்க, கவின் 2 நாட்கள் அவன் நண்பனுடன் வெளியூர் செல்வதால் விடுப்பு எடுத்துள்ளான் எனக் கூறினான்.

எதையும் கூறி நண்பர்களை வருத்தப் படுத்த வேண்டாம் என்று அப்படிக் கூறினான்.

ஹம்சி அந்த வகையில் 2 நாட்கள் யோசிக்க நேரம் கிடைக்க மகிழ்ச்சி தான் கொண்டாள். காரணம்!! அவள் கவின் உடன் நடனம் ஆடியதே நினைவில் உள்ளதால் எங்கே நாம் அவனை விரும்பிவிடுவோமோ என அச்சம் கொண்டாள். ஆனால் அவளுக்குத் தெரியவில்லை அவள் கவின் உடன் நடனம் ஆடக் காரணமே காதல் தான் என்று???(யார் அவளுக்குப் புரிய வைக்க!!!😅)

கவின் நாளைக் கல்லூரி வந்துவிடுவான். அவன் வரும்பொழுது நான் நார்மல் ஆக இருக்க்கனும் என்று நினைத்த ஹம்சி வெகுநேரம் கழித்து தூங்க ஆரம்பிக்க...நடுஇரவில் நிலா அதிர்ந்து விழிக்க அவளின் சப்தத்தில் ஹம்சி மிரண்டு விட்டாள். என்னவெனக் கேட்க... அவன் தான் கனவில் என்று கூறி விழிமூடிவிட... ஹம்சி அவளைத் திட்டிவிட்டு படுத்துவிட்டாள்.

"நான் ஹோம்ல இருக்கேன். ஈவ்னிங் அங்க வந்திடு டா", மதி.

"சரிடா. நான் 6 ஓ க்ளாக் வந்துடுறேன். பை", என்ற கவின் கல்லூரிக்குச் சென்றான்.

மதி ஹோமிற்குச் சென்றான். சிறிய வீடு. முன் பக்கம் அழகான கோலம் போட்டு அதன் நடுவே கம்பீரமாக பிள்ளையார் நிற்கிறார். இருபுறமும் பலவண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்க மேலே ஜாதிக்கொடி படர்ந்து மணம் பரப்பியது. அவன் உள்ளே நுழையக் கண்ட ஒரு குழந்தை அவன் கால்களைக் கட்டிக் கொண்டது. அவன் திரும்பாமலே யார் என அறிந்து கொண்டான்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Where stories live. Discover now