ஹம்சி அனைத்து பைல்களையும் ஒருவழியாக முடிக்க எட்டு மணி ஆனது. முடித்து நிமிர கவின் அவனது இடத்தில் தான் கணினியைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான். சரி நாம் சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என்று நினைத்த ஹம்சி கவினிடம் சென்று...
"சார்... வொர்க் முடிஞ்சு. நான் கிளம்புறென்", ஹம்சி.
"இருங்க மிஸ்.... சாரி மிசஸ் ஹம்சி. கல்யாணக் கலை முகத்தில் தெரியுது. அவ்வளவு சந்தோசமா... ஒரு நாள் கூடப் பார்க்காமால் இருக்க முடியலையா... ஆபிஸ் வர சொல்லி", கவின் தொடர
அவனைக் கை நீட்டித் தடுத்தவள் "நான் சந்தோசமா இருந்தா உங்களுக்கு என்ன சார்... சாரி என் வொர்க் இன்னையொட முடிஞ்சு. என்ன மிஸ்டர், ஆமா கல்யாணம் தான். ரொம்ப சந்தோசமா இருக்கேன். என்னோட பாண்டு கேன்சல் பண்ண சொன்னேன். பன்னிட்டிங்களா", ஹம்சி
"நீ மட்டும் என்ன டி சந்தோசமா இருக்குறது. எனக்கும் தான் திருமணம் முடிவு ஆகிருக்கு... அப்புறம் நீ எனக்கு செய்த செயலுக்கு உன்னை சும்மா விடுவனா. பாண்டு கேன்சல் செய்ய மாட்டேன். உன்னை இனி டார்ச்சர் பன்றது தான் இனி என் வேலை", என்று கூறியவன்
ஹம்சியின் அருகில் வர ஹம்சி அசையாது பார்த்துக் கொண்டு இருக்க... ஒரே இழுவில் அவன் கைகளுக்குள் அடக்கமானாள். அவன் அவளை அணைத்த வண்ணம் அவளின் இடையினில் அழுத்தம் கூட்டி கழுத்தில் முகம் புதைக்க.. அவளிடம் எந்த வெளிப்பாடும் இல்லாததைக் கண்டவன்...
அவளைக் காயப் படுத்தும் பொருட்டு.. அவள் கன்னங்களினைக் கரங்களில் தாங்கி அவளது இதழில் போர் நடத்தினான். அவள் அதற்கும் எந்த வித உணர்வும் காட்டாது விரைப்பாய் நிற்க...
அவளை விடுவித்தவன்... கேள்வியாகப் பார்த்தான்.
லேசாகப் புன்னகைத்தவள் "செத்த பாம்ப எத்தனை முறை அடிச்சாலும் அதற்கு வலிக்காது மிஸ்டர் கவின்", ஹம்சி.
YOU ARE READING
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
Romanceகாதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?