"என்னடா இது நமக்கு வந்த சோதனை... இங்கே ஒருத்தரும் இல்லை. இந்த ரூம் வேற சரியில்லை. சரி போய்டுவோமா...", என்று நினைத்த ஹம்சி லைட் ஆப் செய்யலாம் என செல்ல...
அவள் பாதிதூரம் சென்றதும் மின்துண்டிப்பு ஆனதும் பயம் வந்து விட... அவள் வந்த வழியில் திரும்ப அதுவரை எந்த சப்தமும் இல்லாது இருக்க... அவள் திரும்பியதும் சப்தம் கேட்டது... குழந்தை அழும் சப்தம்... அந்த இடத்தில் குழந்தை இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்க...
ஹம்சிக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது... அவளுக்கு வியர்வைத் துளிகள் பெருக... கைகள் உதற... கால்கள் நடுங்க அப்படியே அருகில் இருந்த பெஞ்சினைப் பற்றி நின்றவளின் கால்கள் நகர மறுத்தது.
அவள் அந்த இருட்டில் பார்க்க ஒன்றும் தெரியவில்லை. இருட்டில் பழக நேரம் எடுத்தது. ஒருவாறு கண்கள் இருட்டில் பழக.. அவள் நிமிர்ந்து பார்த்தாள்...
எதோ ஒரு உருவம் அவள் கண்களுக்குத் தெரிய... அந்த உருவம் அவள் பெஞ்சின் அருகில் சென்று எதுவோ தேட... பின் அவள் அருகில் வரத் தொடங்கியது...
இதோ... இதோ.. வந்துவிட்டது... நாம் தொலைந்தோம்... என அவள் கண்களினை மூடிக் கொண்டாள். அந்த உருவம் அவள் தோள் தொடும் நேரம் அவளின் பயம் அறிந்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டது.
ஹம்சி பயந்துக் கத்த வாய் திறக்க முயலும் முன் அணைத்தது கவின் தான் என அறிந்து கொண்டாள்😉
அவளின் சில்லிட்ட கைகளினை உணர்ந்த கவின் அவளின் முதுகில் தன் கரம் கொண்டு ஆசுவாசப் படுத்தினான். அவளுக்கு கவின் தன்னை அணைத்திருப்பது ஒன்றே போதும் என சப்தம் மறந்து அணைத்து இருந்தாள்.
கவினுக்கு அந்த சப்தம் குட்டிப் பூனை கத்தும் சப்தம் என அறிந்து கொண்டான். ஹம்சி அவனை விட்டு விலகாது இருக்க மெல்லப் பிரித்து நெற்றியில் இதழ் பதிக்க...
"கவின்... எங்கே இருக்க...", என்றவாறு ஒரு பெண் வர...
சட்டென இருவரும் பிரிந்து நின்றனர். அப்பெண்ணிற்கும்
அந்த இருட்டில் தெரியவில்லை என்பதால்
YOU ARE READING
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
Romanceகாதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?